/* */

காற்று மாசுபாட்டை தவிர்க்க கிராம மக்கள் அதிரடி திட்டம்

பல்லடத்தில் உள்ள கிராம மக்கள், காற்று மாசு ஏற்படுவதை தவிர்க்க, விழிப்புணர்வு பேனர் வைத்து அசத்தியுள்ளனர்.

HIGHLIGHTS

காற்று மாசுபாட்டை தவிர்க்க கிராம மக்கள் அதிரடி திட்டம்
X

பணிக்கம்பட்டி கிராமத்தில் ஊர்மக்கள் சார்பில் வைக்கப்பட்டுள்ள பேனர்.

பல்லடம் ஒன்றியம், பணிக்கம்பட்டி கிராமத்தில், ஊர் பொதுமக்கள் சார்பில் வைக்கப்பட்டுள்ள பேனரில் கூறியுள்ளதாவது: பணிக்கம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் செயல்பட்டு வரும் 'சைசிங்' நிறுவனங்கள், காற்று மாசு ஏற்படுத்தும் தென்னை மட்டையை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இதுகுறித்து, ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 'சைசிங்' நிறுவனங்களில் தென்னை மட்டைகள் எரிக்கப்படுவதால் மிக அதிக அளவில் அடர்புகை ஏற்பட்டு சுவாசிக்க முடியாத அளவுக்கு காற்று மாசு ஏற்படுகிறது. தென்னை மட்டை கொண்டு வரும் வாகன உரிமையாளர்கள், 'சைசிங்' நிறுவனங்களுக்கு தென்னை மட்டை சப்ளை செய்வதை தவிர்த்து, காற்றுமாசு ஏற்படுவதை தவிர்க்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இக்கட்டுப்பாடுகளை மீறினால், வாகனங்கள் போலீசில் ஒப்படைக்கப்படும். இவ்வாறு, அந்த பேனரில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 26 Oct 2021 1:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க