/* */

பல்லடம் பகுதியில் கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்

பல்லடம் அருகே ப.வடுகபாளையம்புதுார் ஊராட்சியில், கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.

HIGHLIGHTS

பல்லடம் பகுதியில் கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்
X

ப.வடுகபாளையம்புதுார் ஊராட்சியில், கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. 

பல்லடம் பகுதியில் கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே ப.வடுகபாளையம்புதுார் ஊராட்சியில், கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. கால்நடை உதவி மருத்துவர் அறிவுச்செல்வன் தலைமை வகித்தார். பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க தலைவர் விஜயலட்சுமி, முன்னாள் உதவி மருத்துவர் நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முகாமில், 35க்கும் அதிகமான கால்நடை விவசாயிகள் பங்கேற்றனர். 136 மாடுகள் மற்றும் ஆடுகள், கோழிகள் ஆகியவற்றுக்கு சிகிச்சைகள், பரிசோதனைகள் நடந்தன. கால்நடைகளை தாக்கும் நோயிலிருந்து பாதுகாக்க வேண்டிய வழிமுறைகள் மற்றும் பால் உற்பத்தியை பெருக்குவதற்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

அரசு திட்டங்களில் இணைந்து பயன்பெறுமாறு விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. சிறப்பாக கால்நடைகளை பராமரித்து வரும் ஐந்து விவசாயிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

Updated On: 30 Jan 2022 6:15 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    கோடை வெப்பத்தை எதிர்கொள்ள காவல்துறையினருக்கு சன் கிளாஸ்
  2. நாமக்கல்
    நாமக்கல் மாவட்ட கூட்டுறவுத்துறை அலுவலர்கள் ரத்ததானம் வழங்கல்
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. நாமக்கல்
    சூறாவளிக்காற்றால் மின்கம்பம் முறிந்தது; இருளில் மூழ்கிய கிராமம்
  5. வந்தவாசி
    தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நீர் மோர் பந்தல்
  6. திருவண்ணாமலை
    நியாய விலை கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
  7. செய்யாறு
    பிளஸ் 1 பொதுத்தேர்வில் 88.91 சதவீதம் பேர் தேர்ச்சி
  8. செய்யாறு
    செய்யாற்றில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
  9. வீடியோ
    மனமுருகி சொன்ன இஸ்லாமிய மாணவி | Annamalai சொன்ன அந்த வார்த்தை |...
  10. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து