/* */

கூலித் தொழிலாளிகளாக மாறும் விசைத்தறி முதலாளிகள்

கூலிக்கு நெசவு செய்யும் தொழில் நசிந்து வருவதாக, தெரிவிக்கப்பட்டது.

HIGHLIGHTS

கூலித் தொழிலாளிகளாக மாறும் விசைத்தறி முதலாளிகள்
X

விசைத்தறி உரிமையாளர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்.

கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்க பொதுக்குழு கூட்டம், பல்லடம் அருகே கோம்பக்காடு சிவசக்தி திருமண மண்டபத்தில் நடந்தது. சங்க தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார். செயலாளர் குமாரசாமி, துணை தலைவர் கோபாலகிருஷ்ணன், துணை செயலாளர் ஈஸ்வரன், பொருளாளர் பூபதி முன்னிலை வகித்தனர்.

சங்க தலைவர் பழனிசாமி பேசியதாவது:

2014ம் ஆண்டுக்குப்பின் நெசவு கூலி உயர்த்தப்படவில்லை. விலைவாசி உயர்வு, உதிரி பாகங்கள், பெட்ரோல் டீசல் விலை உயர்வு, தொழிலாளர்கள் கூலி உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் இருந்தும், நெசவு கூலி மட்டும் உயர்த்தப்படவில்லை. அதனடிப்படையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள கூலி உயர்வுக்கு பின்பும், நஷ்டமே ஏற்படும். முதலீடு போட்ட தொழிலில் எந்த பயனும் இல்லை. தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் அட்வான்ஸ் தொகை நாளுக்கு நாள் கூடி வருகிறது.

இப்போதுள்ள கூலி அடிப்படையில், தொழில் செய்ய முடியுமா? சொந்தமாக தறி வைத்திருந்த பலர், மீண்டும் கூலி அடிப்படையில் நெசவு செய்ய துவங்கி விட்டனர். இவ்வாறு, அவர் பேசினார். பலகட்ட பேச்சுவார்த்தைக்கு பின், சோமனுார் ரகங்களுக்கு, 23 சதவீதம், இதர ரகங்களுக்கு, 20 சதவீதம் கூலி உயர்வும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

Updated On: 6 Dec 2021 2:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது