/* */

பல்லடம்: 58 ஆயிரம் கார்டுதாரர்களுக்கு கொரோனா நிவாரணத்தொகுப்பு வழங்கல்

பல்லடம் தாலுகாவில், இதுவரை 58 ஆயிரம் கார்டுதாரர்களுக்கு கொரோனா நிவாரணத்தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

பல்லடம்: 58 ஆயிரம் கார்டுதாரர்களுக்கு  கொரோனா நிவாரணத்தொகுப்பு வழங்கல்
X

பல்லடம் தாலுகாவில் 75 ஆயிரத்து 302 அரிசி கார்டுதார்கள் உள்ளனர். கொரோனா நிவாரண நிதியாக ரூ. 2 ஆயிரம் மற்றும் 14 வகையான மளிகைப்பொருட்கள் கொண்ட நிவாரணத்தொகுப்பு, தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. அவ்வகையில், கடந்த சில நாட்களாக பல்லடம் தாலுகாவில் உள்ள ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரணத்தொகுப்பு மற்றும் ரூ. 2 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது.

இது குறித்து, வட்ட வழங்கல் அதிகாரி தரப்பில் கூறுகையில், பல்லடம் தாலுகாவில் 75 ஆயிரத்து 302 அரிசி அட்டைதார்கள் உள்ளனர். அரசு அறிவித்து நிவாரண நிதி மற்றும் தொகுப்பு, இதுவரை மொத்தம் 62 ஆயிரம் பேருக்கு மளிகை பொருட்கள் தொகுப்பு வந்ததில், 58 ஆயிரம் அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது. இந்த தாலுகாவில் 12 ஆயிரம் பேருக்கு வழங்க வேண்டி உள்ளது. விரைவில் பொருட்கள் வந்தவுடன், இந்த மாத இறுதிக்குள் வழங்கப்பட்டு விடும் என்றார்.

Updated On: 27 Jun 2021 3:02 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பல்கலையின் தலைவர்களுக்கு திருமணநாள்..! வாழ்த்துகிறோம்...
  2. லைஃப்ஸ்டைல்
    50 ஆண்டு திருமண வாழ்க்கை எனும் பொன்விழா! வாழ்த்தலாம் வாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    அம்மா அப்பாவுக்கு திருமண நாள் வாழ்த்து கவிதைகள்
  4. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வில் 92.58 சதவீதம் மாணவர்கள்...
  5. திருத்தணி
    திருத்தணி ஆர்கே பேட்டை அருகே கஞ்சா கடத்திய 3 பேர் கைது
  6. சோழவந்தான்
    உலக நன்மைக்காகவும் மழை வேண்டியும் சோழவந்தானில் யாகம்..!
  7. திருத்தணி
    சரக்கு வாகன ஓட்டுனரை வெட்டி வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையன் கைது
  8. நாமக்கல்
    சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு தேர்வுகளில் நேஷனல் பப்ளிக் பள்ளி 100 சதவீதம்...
  9. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதியம்மன் ஆலயத்தில் திருக்கல்யாண விழா..!
  10. நத்தம்
    நத்தம் பகவதி அம்மன் திருவிழா: காப்புக்கட்டுடன் தொடங்கியது..!