பல்லடம் அருகே வடமாநில தொழிலாளி கொலை
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த நாரணாபுரம் எடத்தளாங்காட்டு தோட்டத்தில் வாலிபர், இரண்டு கைகள் கட்டப்பட்டநிலையில், தலையில் கல்லைப்போட்டு கொலை செய்யப்பட்டிருந்தது. தலையில் கொடூரமாக சிதைத்து கொலை செய்யப்பட்டு இருந்தது.
இதை கண்ட அப்பகுதி மக்கள் பல்லடம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். பல்லடம் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றிவிசாரித்தனர். மேலும், கொலை நடந்த இடத்திற்கு வந்த மோப்ப நாய் டேவில், மோப்பம் பிடித்து சிறிதுதூரம் சென்று நின்று விட்டது.
கைரேகை நிபுணர்கள் உடலை ஆய்வு செய்தனர். போலீஸார் விசாரணையில், கொலை செய்யப்பட்ட நபர், அருகே உள்ள டெக்ஸ்டைல் நிறுவனத்தில் வேலை பார்த்த விஷால்பால், இவர், உத்தரபிரதேச மாநிலம் சூரன் நகர் உள்ள அம்பேத்கார் நகரை சேர்ந்தவர். கடந்த ஒரு மாதத்துக்கு முன் இங்கு வேலை சேர்ந்துள்ளார். நேற்று இரவு வேலை முடிந்து வெளியில் சென்றவர் மீண்டும் வீடு திரும்ப வில்லை என தெரியவந்தது. இந்த கொலைக்கான காரணம் குறித்து பல்லடம் போலீஸார் விசாரிக்கின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu