சகதி நிறைந்த சாலை ; அவதிப்படும் பொதுமக்கள்

சகதி நிறைந்த சாலை ; அவதிப்படும் பொதுமக்கள்
X

சேறு சகதி நிறைந்த கரைப்புதூர் ஊராட்சி வெங்கடேஸ்வரா நகர் சாலை. 

கரைப்புதூர் ஊராட்சி வெங்கடேஸ்வரா நகரில், சேறு சகதி நிறைந்த சாலையில் நடந்து செல்ல மக்கள் சிரமப்படுகின்றனர்.

பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் ஊராட்சி வெங்கடேஸ்வரா நகரில், 100 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்நிலையில் அந்த பகுதிக்கு செல்லும் மண் சாலை மழைக்காலங்களில் சேறும, சகதியுமாக இருப்பதால், பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்தும் விடுகின்றனர்.

எனவே, ஊராட்சி நிர்வாகம் மண் சாலையை தார் சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Tags

Next Story
why is ai important to the future