Begin typing your search above and press return to search.
பல்லடம் அருகே இளைஞர் வெட்டிக் கொலை
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த தெற்குபாளையம் பிரிவு பகுதியில் சாலையோரம் கழுத்தறுபட்டு வெட்டுப்பட்ட நிலையில் ஆண் சடலம் ஒன்று கிடந்தது. இந்த சடலத்தை பார்த்தவர்கள் பல்லடம் போலீசார் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை செய்தார்கள். விசாரணையில் உயிரிழந்தவர் மானாமதுரையை சேர்ந்த முருகன் (32) என்பது தெரியவந்துள்ளது.தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.