/* */

பல்லடத்தில் 20 ஆண்டு ஆக்கிரமிப்பு அகற்றம்

ஐகோர்ட் உத்தரவை தொடர்ந்து, கரடிவாவியில், 20 ஆண்டுக்கும் மேலாக இருந்த நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி துவங்கியது

HIGHLIGHTS

பல்லடத்தில் 20 ஆண்டு ஆக்கிரமிப்பு அகற்றம்
X

கரடிவாவியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெற்றது. 

திருப்பூர் மாவட்டம், பல்லடம் ஒன்றியம், கரடிவாவி ஊராட்சிக்கு உட்பட்ட கரடிவாவி புதூரில், சின்னக்குட்டை உள்ளது. குட்டையை ஆக்கிரமித்து ஒரு ஏக்கரில் குடியிருப்புகள், குடோன்கள் கட்டப்பட்டுள்ளன. நீராதாரம் பாதிக்கப்படுவதாக கூறி, அப்பகுதியை சேர்ந்த விவசாயி கார்த்திகேயன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். அதனடிப்படையில், ஆக்கிரமிப்புகளை அகற்ற, ஐகோர்ட் உத்தரவிட்டது.

கோர்ட் உத்தரவை பின்பற்றி, 20 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி துவங்கியது. குட்டையை சுற்றி, 3,548 சதுர மீட்டர் பரப்பளவில், 41 குடியிருப்புகள் குடோன்கள் கட்டப்பட்டு ஆக்கிரமிப்பில் உள்ளன. ஆக்கிரமிப்புகளை அகற்றி கொள்ளுமாறு கடந்த ஜூலையில் நோட்டீஸ் வினியோகிக்கப் பட்டுள்ளது. கோர்ட் உத்தரவுவின்படி ஆக்கிரமிப்பு அகற்றும் பணி துவங்கியுள்ளது என, வருவாய்த்துறையினர் கூறினர்.

Updated On: 28 Feb 2022 1:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  2. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  3. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  5. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  6. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  7. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு
  8. லைஃப்ஸ்டைல்
    புரதச் சத்துக்களைத் தவிர்க்க மக்களை வலியுறுத்தும் ஐசிஎம்ஆர் மருத்துவக்...
  9. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் இலவச இருதய மருத்துவ முகாம்..!
  10. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகராட்சி சார்பில் வீடற்றவர்களுக்காக மேலும் 3 தங்கும்...