20 ஆண்டுக்குப்பின் விசைத்தறியாளர்கள் கூலி உயர்வு பேச்சுவார்த்தை
பல்லடத்தில் விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் விசைத்தறியாளர்கள் இடையே கூலி உயர்வு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
HIGHLIGHTS
பல்லடத்தில் விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் விசைத்தறியாளர்கள் இடையே கூலி உயர்வு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
விசைத்தறி உரிமையாளர்களுக்கு கடந்த, 2014ம் ஆண்டு உயர்த்தப்பட்ட ஒப்பந்த கூலி ஒரு சில ரகங்களுக்கு வழங்கப்படாமல் இருப்பதாக தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தனர். இதுதொடர்பாக, தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் முன்னிலையில் நடந்த 10 கட்ட பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.
இதற்கிடையே, 20 ஆண்டுக்கு பின் விசைத்தறி உரிமையாளர்கள் மற்றும் ஜவுளி உற்பத்தியாளர்கள், நேரடிப் பேச்சு வார்த்தையில் ஈடுபடத் துவங்கியுள்ளனர். இருதரப்பினரும், தொழில் நிலை கருதி கைகோர்த்துள்ளனர்.
ஜி.எஸ்.டி., பெட்ரோல், டீசல் விலை மற்றும் விலைவாசி உயர்வு உள்ளிட்டவற்றை அடிப்படையாக கொண்டு, கூலி உயர்வு ஒப்பந்தத்தை அமல்படுத்த இரு தரப்பி னரும் முன்வந்துள்ளனர். விரைவில், கூலி உயர்வு உடன்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக விசைத்தறி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.