/* */

மடத்துக்குளம் பகுதியில் திடீர் மழை பொது மக்கள் மகிழ்ச்சி

மடத்துக்குளம் பகுதியில் திடீரென மழை பெய்ததால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

HIGHLIGHTS

மடத்துக்குளம்  பகுதியில் திடீர் மழை  பொது மக்கள் மகிழ்ச்சி
X

மடத்துக்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வந்தது. இந்நிலையில் காலை நேரத்தில் வெயில் சுட்டெரித்தது.அதன் பிறகு வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.

இன்று மதியம் திடீரென்று மழை பெய்ய ஆரம்பித்தது. பின்னர் அது பலத்த மழையாக உருவெடுத்தது. குறிப்பாக மடத்துக்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான குமரலிங்கம், கொழுமம், கணியூர், கடத்தூர், காரத்தொழுவு, தூங்காவி, மெட்ராத்தி, வேடபட்டி, கழுகரை, ஜோத்தம்பட்டி. பாப்பான்குளம், சோழமாதேவி, சாமராயபட்டி, கண்ணாடிபுதூர், கிருஷ்ணாபுரம், மைவாடி, போன்ற பகுதிகளில் மழை பெய்தது. இந்த மழை மழையால் அப்பகுதியில் பல இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது. மழை பெய்ததால் மடத்துக்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Updated On: 5 Jun 2021 1:09 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு
  2. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...
  3. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
  4. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே சுவையான மக்கானா கீர் செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    ஏசி அறையில் தூங்கலாமா? கூடாதா? - விவரமா தெரிஞ்சுக்குங்க!
  6. லைஃப்ஸ்டைல்
    ஆழியில் கண்டெடுத்த அற்புத முத்து..! எங்க வீட்டு இளவரசி..!
  7. தமிழ்நாடு
    வாகனங்களில் ஸ்டிக்கர்களுக்கு தடை! விலக்கு அளிக்க வழக்கறிஞர்கள் சங்கம்...
  8. லைஃப்ஸ்டைல்
    என்றென்றும் நம் நினைவில் நிற்கும் ஆசிரியர்கள்
  9. திருவண்ணாமலை
    மாணவா்கள் இணையதள மோசடிகளில் சிக்காதீர்: கூடுதல் எஸ்.பி. அறிவுரை
  10. வீடியோ
    வரிசைகட்டி டூர் அடிக்கும் அரசியல்வாதிகள் |மலைப்பிரதேசங்களில் கூத்து...