பஞ்சு விலை குறைவு எதிரொலி; நூல் விலை ரூ.20 சரிவு

பஞ்சு விலை குறைவு எதிரொலி; நூல் விலை ரூ.20 சரிவு

திருப்பூரில், பனியன் உற்பத்திக்கான நுால் விலை குறைந்தது. 

Cotton Market Price -பஞ்சு விலை குறைந்ததால், நூல் விலையும் கிலோவுக்கு ரூ.20 குறைந்தது.

Cotton Market Price -திருப்பூரில் உற்பத்தி செய்யப்படும் பின்னலாடைகளுக்கு, நுால் முக்கிய மூலப்பொருளாக உள்ளது. பருத்தி விலை உயர்வால், கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு, நுால்விலை அபரிமிதமாக உயர்ந்தது. கடந்த ஆண்டைக்காட்டிலும், நூல் விலை கிலோவுக்கு 100 சதவீதம் அதிகரித்தது. இந்த விலை உயர்வால் உள்நாட்டு, வெளிநாட்டு ஆடை உற்பத்தியாளர்கள் புதிய ஆர்டர்களை எடுக்க முடியவில்லை. இதனால், பனியன் நிறுவனங்களில் உற்பத்திய முடங்கியது. தொழிலாளர்களுக்கு வேலை இல்லாத நெருக்கடியான சூழல் ஏற்பட்டது. கைவசம் உள்ள ஆர்டர்கள் மட்டுமே, பனியன் நிறுவனங்களில் தயார் செய்து கொடுக்கப்பட்டது. தீபாவளி பண்டிகை ஆர்டர் கூட எதிர்பார்த்த அளவுக்கு இல்லாமல் பனியன் உற்பத்தியாளர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில், கடந்த மூன்று மாதங்களாக நூல் விலை குறைய தொடங்கியது. இதற்கு நூல் வாங்குவதை பனியன் நிறுவனத்தினர் நிறுத்தியதும் ஒரு காரணம். நூற்பாலைகளும், தங்களிடம் இருக்கும் நூல்களை விற்பனை செய்வதற்காக நூல் விலையை குறைத்தன. மேலும் பஞ்சு விலையும், ஒரு கேண்டி ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்தில் இருந்து, தற்போது ரூ.65 ஆயிரமாக குறைந்துள்ளது.

நூல் விலையை மாதம்தோறும் 1-ம்தேதி நூற்பாலைகள் அறிவிப்பது வழக்கம். அந்த வகையில் கடந்த அக்டோபர் நூல் விலை கிலோவுக்கு ரூ.40 குறைந்தது. இந்த மாதத்துக்கான நூல் விலையை, நூற்பாலைகள் நேற்று அறிவித்தன. அதன்படி அனைத்து வகை நூலும் கிலோவுக்கு மேலும் ரூ.20 வரை குறைந்துள்ளது.

இதனால் தற்போது கோம்டு ரகம் வரி நீங்கலாக 20-ம் நம்பர் கிலோ ரூ.273, 24-ம் நம்பர் ரூ.285, 30-ம் நம்பர் ரூ.295, 34-ம் நம்பர் ரூ.315, 40-ம் நம்பர் ரூ.335 என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது செமி கோம்டு ரகம் 20-ம் நம்பர் ரூ.265, 24-ம் நம்பர் ரூ.275, 30-ம் நம்பர் ரூ.285, 34-ம் நம்பர் ரூ.305, 40-ம் நம்பர் ரூ.325 என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாதம் கிலோவுக்கு மேலும் ரூ.20 நூல் விலை குறைந்துள்ளது, பனியன் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உள்நாட்டு உற்பத்தியாளர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.

தற்போது வெளிநாட்டு ஆர்டர்கள் திருப்பூர் நோக்கி வரத்தொடங்கியிருக்கும் இந்த வேளையில் நூல் விலை குறைவு தங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. இதனால் பனியன் வர்த்தகம் மீண்டும் எழுச்சி பெறும் என்று நம்பிக்கையில் உள்ளனர். வட மாநிலங்களிலும் உள்ள நூற்பாலைகளும் நூல் விலையை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.15 வரை குறைத்துள்ளன. பருத்தி விலை குறைவு காரணமாகவும், பனியன் உற்பத்தி நிறுவனங்கள் நூல் தேவையை குறைத்துக் கொண்டதன் காரணமாகவும் தீபாவளி பண்டிகைக்கு பிறகு, நூற்பாலைகள் நூல் விலையை குறைத்துள்ளது. லுாதியானா மற்றும் டெல்லி நூற்பாலைகள் நூல் விலையை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.15 வரை குறைத்துள்ளன. அதன்படி 30-ம் நம்பர் நூல், வரியை சேர்த்து கிலோ ரூ.300 முதல் ரூ.310-க்கும், 20-ம் நம்பர் ரூ.290-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் பாலியஸ்டர் நூலிழை விலையும் கிலோவுக்கு ரூ.2 குறைந்துள்ளது. பாலியஸ்டர் நூலிழை விலை கிலோ ரூ.107-ல் இருந்து ரூ.105 ஆக குறைந்துள்ளது. இது பனியன் உற்பத்தியாளர்களை உற்சாகமடைய செய்துள்ளது.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story