/* */

தக்காளி லோடு ஏற்றி வந்த வாகனத்தை நிறுத்தி திருட்டு

தாராபுரத்தில், தக்காளி பெட்டியுடன் லோடு ஏற்றி வந்த வாகனத்தை நிறுத்தி அதில் இருந்த, 25 ஆயிரம் மதிப்புள்ள தக்காளி திருடப்பட்டது.

HIGHLIGHTS

தக்காளி லோடு ஏற்றி வந்த வாகனத்தை நிறுத்தி திருட்டு
X

பைல் படம்.

தாராபுரம் பழைய கோட்டைமேடு பகுதியை சேர்ந்தவர் நடராஜ் (33). இவர் தினசரி தாராபுரம் பகுதியில் உள்ள தோட்டங்களில் விளையும் தக்காளியை விவசாயிகளிடமிருந்து விலைக்கு வாங்கி, தாராபுரம் மற்றும் சின்னதாராபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு தனது மினி ஆட்டோ வாகனம் மூலம் கொண்டு சென்று அங்குள்ள மளிகைக் கடைகளுக்கு தக்காளி விற்பனை செய்து வருவது வழக்கம்.

நேற்று முன்தினம் இரவு, அலங்கியம் பகுதியில் இருந்து தக்காளி ஏற்றி வந்தவர், மினி ஆட்டோவை தனது வீட்டருகே நிறுத்திவிட்டு தூங்க சென்றார். அப்போது அதில், 15 கிலோ எடை கொண்ட 42 பெட்டிகள் இருந்தன. இந்நிலையில், நடராஜன் காலையில் விற்பனைக்காக ஆட்டோவை எடுத்துச்செல்ல வந்தபோது ஆட்டோவில் இருந்த தக்காளி அடைக்கப்பட்ட, 21 பெட்டி திருடப்பட்டிருப்பது தெரிய வந்தது. தாராபுரம் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

Updated On: 29 Dec 2021 2:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  3. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  4. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  5. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு
  6. லைஃப்ஸ்டைல்
    புரதச் சத்துக்களைத் தவிர்க்க மக்களை வலியுறுத்தும் ஐசிஎம்ஆர் மருத்துவக்...
  7. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் இலவச இருதய மருத்துவ முகாம்..!
  8. ஆலங்குளம்
    ஆலங்குளம் அருகே நூதன முறையில் பண மோசடி : 4 பேர் கைது..!
  9. குமாரபாளையம்
    சேலம் கோவை புறவழிச் சாலை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்
  10. ஈரோடு
    கோடை விடுமுறை கொடிவேரி தடுப்பணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்..!