/* */

தாராபுரத்தில் சுகாதாரத்தை வலியுறுத்தி மாணவர்கள் சைக்கிள் பேரணி

உலக சுகாதார தினத்தை முன்னிட்டு, தாராபுரத்தில் தனியார் பள்ளி மாணவ மாணவிகள், ஆறு கி.மீ., தூரம் சைக்கிள் பேரணி நடத்தினர்.

HIGHLIGHTS

தாராபுரத்தில் சுகாதாரத்தை வலியுறுத்தி மாணவர்கள் சைக்கிள் பேரணி
X

தாராபுரம் அகரம் பப்ளிக்பள்ளி, உலக சுகாதார தினத்தை முன்னிட்டு சைக்கிள் பேரணி நடத்தினர். 

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அகரம் பப்ளிக்பள்ளி, உலக சுகாதார தினத்தை முன்னிட்டு பள்ளி தேசிய மாணவர் படையினர், 100 சைக்கிள்களில் பேரணி சென்றனர். இப்பேரணியில், கர்ணல் ஜெ.பி.எஸ்.சவுஹான் பங்கேற்று, வாழ்த்தி பேசினார். தாராபுரம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் தனராசு, கொடியசைத்துப் பேரணியை துவக்கி வைத்தார்.

அகரம் பள்ளியில் தொடங்கிய பேரணி, மீனாட்சிபுரம் கொளிஞ்சிவடி ஐந்து சாலை சந்திப்பு, அண்ணாசிலை, பூக்கடை கார்னர் அமராவதி ரவுண்டானா வழியாக வந்து, புதிய பேருந்து நிலையம் முன்பு பதாகைகளை ஏந்தியவாறு வந்தனர். மாணவ மாணவியர் ஆறு கி.மீ., தூரம் சைக்கிள் பேரணி நடத்தினர். தொடர்ந்து, மாணவர் குழுவினர் சுகாதார விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நாடகம், யோகா, நடனம் போன்ற கலைநிகழ்ச்சிகளை நடத்தினர்.

Updated On: 8 April 2022 1:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மனைவியின் பிறந்தநாள்: அன்பையும் மதிப்பையும் காட்ட சிறந்த சந்தர்ப்பம்
  2. தமிழ்நாடு
    நாட்டாமைக்கு பா.ஜ.க.,வில் புதிய பதவி?
  3. வீடியோ
    🔴LIVE : பாரத பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியில் வேட்புமனு தாக்கல் ||...
  4. அரசியல்
    உதயநிதிக்கு புரோமோசன்! தமிழக அமைச்சரவை மாற்றம்?
  5. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. கோவை மாநகர்
    11 ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த கோவை
  8. திருவள்ளூர்
    மின்சாரம் பாய்ந்து வடமாநில தொழிலாளி உயிரிழப்பு!
  9. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை இழந்தவர்களுக்கு அவர்களின் பிறந்தநாளில் செய்ய வேண்டியது என்ன?
  10. மாதவரம்
    புழல் மின் நிலையத்தில் திடீர் தீ விபத்து