/* */

தேசிய திறனாய்வு தேர்வில் சின்னமுத்தூர் அரசு பள்ளி மாணவி மாநில அளவில் தேர்ச்சி

தேசிய திறனாய்வு தேர்வில், திருப்பூர் மாவட்டம், சின்னமுத்தூர் அரசுபள்ளி மாணவி சுபிக்‌ஷா, மாநில அளவில் தேர்வு பெற்றுள்ளார்.

HIGHLIGHTS

தேசிய திறனாய்வு தேர்வில் சின்னமுத்தூர்  அரசு பள்ளி மாணவி மாநில அளவில் தேர்ச்சி
X

மாணவி சுபிக்சா

தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதம், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் 8 ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு தேசிய திறனாய்வு போட்டி நடைபெற்றது. இதில், வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட முத்தூர் நகர சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த அரசு நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கான தேர்வு, முத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.

இந்த தேர்வில், சின்னமுத்தூர் அரசு நடுநிலைப்பள்ளி 8ம் வகுப்பு மாணவி ஜி.சுபிக்சா, மாநில அளவில் தேர்ச்சி பெற்று சாதனை புரிந்து உள்ளார். வெற்றி பெற்ற மாணவியை, பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் பாராட்டினர். வெற்றி பெற்ற மாணவிக்கு 9ம் வகுப்பு முதல் ப்ளஸ்2 வரையில் , கல்வித்துறை சார்பில் மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Updated On: 24 Jun 2021 8:21 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வளையோசை கலகலவென ஓசை கேட்கும் வளைகாப்பு நிகழ்ச்சி..!
  2. தமிழ்நாடு
    புருவம் வழியாக மூளைக் கட்டிக்கான உலகின் முதல் கீஹோல் அறுவை சிகிச்சை:...
  3. அரசியல்
    காங்கிரஸ் சரிவுக்கு காரணம் அறியாமை, சோம்பேறித்தனம், ஆணவம்: சொல்கிறார்...
  4. லைஃப்ஸ்டைல்
    கண்டவுடன் கேட்கும் முதல் கேள்வி, "சாப்பிட்டியாப்பா"..? அம்மா..!
  5. தென்காசி
    ராஜீவ் காந்தி நினைவு நாள் காங்கிரஸ் கட்சியினர் மரியாதை
  6. தென்காசி
    பட்டுப்புழு கூடு உற்பத்தி பாதிப்பு; நிவாரணம் வழங்க விவசாயிகள்
  7. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் மாவட்ட வேளாண்துறை பணிகளை திடீர் ஆய்வு செய்த ஆட்சியர்
  8. தொண்டாமுத்தூர்
    கோவை தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் ஓட்டை பிரித்து நகை பணம் கொள்ளை
  9. உலகம்
    5 நிமிடங்களில் 6,000 அடி இறங்கிய சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம்: ...
  10. கோவை மாநகர்
    கோவையில் தொடர் கனமழை ; இயல்பு வாழ்க்கை பாதிப்பு