/* */

தாராபுரத்தில் மழை, வெள்ளம் பாதிப்பு: அமைச்சர் கயல்விழி ஆய்வு

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில், மழை வெள்ள பாதிப்புகளை, அமைச்சர் கயல்விழி பார்வையிட்டார்.

HIGHLIGHTS

தாராபுரத்தில் மழை, வெள்ளம்  பாதிப்பு: அமைச்சர் கயல்விழி ஆய்வு
X

தாராபுரத்தில், மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை, அமைச்சர் கயல்விழி சந்தித்து ஆறுதல் கூறினார்.

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் நேற்று இடி, மின்னலுடன் கனமழை கொட்டியது. இதனால் சாலைகளில், வெள்ளம் பெருக்கெடுத்தது. நகரின் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கியதால், மக்கள் வீடுகளில் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

நகராட்சிக்கு உட்பட்ட வடதாரை, காமராஜபுரம், ஜல்லிக்குழி உள்ளிட்ட இடங்களில், வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. அங்குள்ள குடியிருப்புகளில் வசித்த, 100க்கும் மேற்பட்ட மக்கள், திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

மழை பாதிப்பு ஏற்பட்ட இடங்களை, ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி, இன்று பார்வையிட்டார். மக்களிடம் குறை கேட்டறிந்தார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு, நிவாரணம் வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Updated On: 18 Nov 2021 3:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  3. குமாரபாளையம்
    குமாரபாளைத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம்!
  4. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  5. கோவை மாநகர்
    காவசாகி என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றிய அரசு...
  6. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  7. திருப்பரங்குன்றம்
    மதுரை விமான நிலையத்தில், பல லட்சம் பெறுமான தங்கம் மீட்பு
  8. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில், பலத்த மழை: சாலைகளில் மழைநீர்!
  9. குமாரபாளையம்
    10ம் வகுப்பு பொதுத் தேர்வில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளி மாணவ,...
  10. ஈரோடு
    ஈரோடு மாநகரில் உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனை: 23 கிலோ அழுகிய...