/* */

தாராபுரம் - ஊரடங்கு விதி மீறிய 4 கடைகளுக்கு சீல்

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில், ஊரடங்கை மீறி செயல்பட்ட 4 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

HIGHLIGHTS

தாராபுரம் - ஊரடங்கு விதி மீறிய 4 கடைகளுக்கு சீல்
X

கோப்பு படம்

தமிழகத்தில், கோவைக்கு அடுத்தபடியாக திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகளவில் காணப்படுகிறது. கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் வகையில், தளர்வுகளற்ற ஊரடங்கு அமலில் உள்ளது.
அத்துடன், கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறையினர் பல்வேறு, நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். விதிமீறலில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தாராபுரம் ஜின்னா மைதானம் பகுதியில், மாட்டிறைச்சி கடை இயங்குவதும், தளவாய்ப்பட்டினம் கிராமத்தில் ஒரு மளிகை கடையும், கன்னிவாடி அருகே புதுப்பை கிராமத்தில் 2 மளிகைக்கடைகளும் விதிகளை மீறி செயல்பட்டு வருவதும் கண்டறியப்பட்டது.

இதையடுத்து, தாராபுரம் சப் கலெக்டரின் உத்தரவின் பேரில், தாசில்தார் ரவிச்சந்திரன் முன்னிலையில், இக்கடைகளுக்கு, வருவாய் துறை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

Updated On: 30 May 2021 12:28 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை இழந்தவர்களுக்கு அவர்களின் பிறந்தநாளில் செய்ய வேண்டியது என்ன?
  2. மாதவரம்
    புழல் மின் நிலையத்தில் திடீர் தீ விபத்து
  3. லைஃப்ஸ்டைல்
    காதல் நிறைந்த வாழ்க்கைப் பயணம்! கணவருக்கு திருமண ஆண்டுவிழா...
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பு கணவருக்கு அன்பான ஆண்டுவிழா வாழ்த்துகள்!
  5. லைஃப்ஸ்டைல்
    அம்மாவின் பிறந்தநாளில், அன்பின் வெளிப்பாடுகள்!
  6. திருநெல்வேலி
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. ஈரோடு
    பெருந்துறையில் வாகன சோதனையில் போதை மாத்திரை, கஞ்சா சாக்லேட் பறிமுதல்:...
  8. காஞ்சிபுரம்
    +1 தேர்வு முடிவுகள் : காஞ்சிபுரம் மாவட்டத்தில் 86.98% மாணவர்கள்...
  9. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  10. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்