/* */

கோழி பண்ணையாளர்களுக்கு இலவச மின்சாரம் வழங்கக்கோரிக்கை

தாராபுரத்தில் நடந்த கூட்டத்தில், கோழிப் பண்ணைகளுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

HIGHLIGHTS

கோழி பண்ணையாளர்களுக்கு இலவச மின்சாரம் வழங்கக்கோரிக்கை
X

கறிக்கோழி வளர்ப்பு பண்ணையாளர்கள் கூட்டத்தில் நிர்வாகிகள் பேசினர்.

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் தனியார் மண்டபத்தில், தாராபுரம் வட்டார கறிக்கோழி பண்ணை வளர்ப்பு பண்ணையாளர்களின் கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டது. சங்கத்தின் மாநில தலைவர் மூர்த்தி தலைமை தாங்கினார். மாநில செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, மாநில பொருளாளர் சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: கோழி பண்ணையாளர்களுக்கு, அரசு இலவசமாக மின்சாரம் வழங்க வேண்டும் என அரசை வலியுறுத்துவது; நலவாரியம் அமைக்க பெயர் பட்டியல் தயாரித்து அரசிடம் சமர்ப்பிப்பது. கறிக்கோழி வளர்க்கும் பண்ணையாளர்களுக்கு கறிக்கோழிக்கு வளர்ப்பு கூலியாக கிலோவுக்கு 10 ரூபாய், நாட்டுக் கோழிக்கு 15 ரூபாய், கால்நடைகளுக்கு 5 ரூபாய் உயர்வாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், தாராபுரம் வட்டார பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட கறிக்கோழிப்பண்ணை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 17 Dec 2021 2:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!