/* */

ருத்ராவதி பேரூராட்சியில் அ.தி.மு.க. வேட்பாளர் போட்டியின்றி தேர்வு?

தாராபுரம் அருகே ருத்ராவதி பேரூராட்சி, 14வது வார்டில், அ.தி.மு.க., வேட்பாளர் மட்டும் மனுத்தாக்கல் செய்துள்ளதால், போட்டியின்றி தேர்வாகும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

HIGHLIGHTS

ருத்ராவதி பேரூராட்சியில் அ.தி.மு.க. வேட்பாளர் போட்டியின்றி தேர்வு?
X

சுமதி

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே ருத்ராவதி பேரூராட்சியில், 15 வார்டுகள் உள்ளன. ஆண்கள், 3,212 ஆண்கள்; 3,348 பெண்கள் என, 6,560 வாக்காளர் உள்ளனர். மொத்தம், 15 ஓட்டுச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பேரூராட்சியின் 14வது வார்டு, பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க., சார்பில், சங்கம்பாளையத்தை சேர்ந்த, சுமதி, 43 என்பவர் மனுத்தாக்கல் செய்துள்ளார். அவரது உறவினர் கார்த்திகா, மாற்று வேட்பாளராக மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

மற்ற யாரும் மனுத்தாக்கல் செய்யாத நிலையில், நேற்றைய பரிசீலனையின் போது, இரண்டு மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாற்று வேட்பாளர் வாபஸ் பெறும் நிலையில், வேட்பாளர் சுமதி, போட்டியின்றி வெற்றி பெறும் சூழல் உருவாகியுள்ளது.

Updated On: 6 Feb 2022 1:15 PM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...