/* */

தாயில்லா குழந்தைகளின் தந்தை கொரோனாவுக்கு பலி: ஆதரவற்ற சிறுவர்களுக்கு திருப்பூர் கலெக்டர் உதவுவாரா?

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே தாய், தந்தை இறந்த சிறுவர்களுக்கு, நிவாரணம் வழங்கி அரசு உதவ வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

HIGHLIGHTS

தாயில்லா குழந்தைகளின் தந்தை கொரோனாவுக்கு பலி: ஆதரவற்ற சிறுவர்களுக்கு திருப்பூர் கலெக்டர் உதவுவாரா?
X

தாராபுரம் கொண்டரசம்பாளையம் கே.கே.நகர் பகுதியை சேர்ந்தவர் செந்தில் குமார்,45. கார் டிரைவராக பணியாற்றி வந்தார். இவருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு, பெருந்துறை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

செந்தில்குமாரின் மனைவி கார்த்திகா, கடந்த 9 ஆண்டுக்கு முன் இறந்து விட்டனர். இவர்களுக்கு தரணீஷ்,13, ரித்விக்,10, என்ற இரு குழந்தைகள் உள்ளனர். தரணீஷ், 9 ம் வகுப்பும், ரித்விக்,5 ம் வகுப்பு படித்து வருகின்றனர். ஏற்கனவே தாய் இறந்த நிலையில், தற்போது தந்தையும் இறந்து விட்டதால், குழந்தைகள் ஆதரவற்ற நிலையில் உள்ளனர்.

கார்த்திகாவின் தாய் தேவி, இரண்டு குழந்தைகளையும் கவனிக்கிறார். அவரும் வயதானவர் என்பதால், குழந்தைகளை பராமரிக்க முடியாத நிலையில் உள்ளார். இந்த குழந்தைகளுக்கு கொரோனா அரசின் நிவாரணத்தொகை கிடைக்க, திருப்பூர் மாவட்ட கலெக்டரோ, அல்லது அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தாயும், தந்தையும் இல்லாத நிலையில் குழந்தைகளின் படிப்பு, எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளதால், தொண்டு அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் இக்குழந்தைகளுக்கு உதவவும், படிப்தை தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. திருப்பூர் மாவட்ட கலெக்டர் நடவடிக்கை உரிய நடவடிக்கை எடுத்து, குழந்தைகளுக்கு உதவ முன்வர வேண்டும்.

Updated On: 6 Jun 2021 9:44 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  2. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  3. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  4. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு
  5. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...
  6. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே சுவையான மக்கானா கீர் செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    ஏசி அறையில் தூங்கலாமா? கூடாதா? - விவரமா தெரிஞ்சுக்குங்க!
  9. லைஃப்ஸ்டைல்
    ஆழியில் கண்டெடுத்த அற்புத முத்து..! எங்க வீட்டு இளவரசி..!
  10. தமிழ்நாடு
    வாகனங்களில் ஸ்டிக்கர்களுக்கு தடை! விலக்கு அளிக்க வழக்கறிஞர்கள் சங்கம்...