/* */

போலி விதை கண்டறிய உஷார்படுத்தும் அதிகாரிகள்

போலி விதை கண்டறிவது தொடர்பாக விவசாயிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

HIGHLIGHTS

போலி விதை கண்டறிய உஷார்படுத்தும் அதிகாரிகள்
X

பைல் படம்.

தாராபுரம் குண்டடம் பகுதியில், சின்ன வெங்காயம் சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் போலி விதைகளை பயன்படுத்தி, நஷ்டம் அடைவதை தவிர்க்க, விவசாயிகளுக்கு வேளாண்மை துறை அலுவலகத்தில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

விதை ஆய்வு உதவி இயக்குனர் ஜெயராமன் கூறியதாவது;

விவசாயிகள், விதைகளை வாங்கும் போது தரச்சான்று, குழுமம் எண், விதை தரம், காலாவதி தேதி உள்ளிட்டவைகள் பதியப்பட்டுள்ளதா என கவனித்து வாங்க வேண்டும். வாங்கிய விதைக்கு உரிய ரசீது பெற வேண்டும்.

விதை விற்பனையாளர்களும் இந்த விவரங்களை குறிப்பிட்டு விதை வாங்கும் விவசாயிகளிடம் கையொப்பம் வாங்கி இருக்க வேண்டும். விதை கொள்முதல், பதிவு சான்று, விதை முளைக்கும் திறன் அறிக்கை ஆகியவற்றை பதிவேட்டில் முறையாக பராமரிக்க வேண்டும். இதனை மீறுவோர் மீது விதை சட்டம் மற்றும் விதை கட்டுப்பாடு ஆணையின்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

முகாமில், வேளாண்மை உதவி இயக்குனர் பழனிகுமார், தோட்டக்கலை உதவி இயக்குனர் மோகனா, விதை ஆய்வாளர்கள் விஜயா, நவீன், விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் பங்கேற்றனர்.

Updated On: 4 Dec 2021 1:30 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  2. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  3. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  4. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  5. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  6. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  8. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  9. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  10. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு