/* */

உயிரிழந்த மாணவன்: நஷ்ட ஈடு கேட்டு கோட்டாட்சியரிடம் மனு

ஆற்றில் குளிக்க சென்று இறந்த மாணவனுக்கு, 5 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு மாணவனின் பெற்றோர் கோட்டாட்சியரிடம் மனு வழங்கினர்.

HIGHLIGHTS

உயிரிழந்த மாணவன்: நஷ்ட ஈடு கேட்டு கோட்டாட்சியரிடம் மனு
X

ஆற்று நீரில் மூழ்கி இறந்த மாணவனுக்கு நஷ்ட ஈடு பெற்றுத் தரக்கோரி கோட்டாட்சியரிடம் மனு வழங்க வந்த மாணவரின் பெற்றோர்.

சேலம் மாவட்டம், ஆத்துாரை வன்னயம்மாதேவி பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் மகேந்திரன் (வயது19). தாராபுரத்தில் உள்ள தனியார் கல்லுாரியில், முதலாம் ஆண்டு, பி.எஸ்.சி., நர்சிங் படிப்பில் சேர்ந்து, கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்தார். சக நண்பர்களுடன் வெளியே செல்வதாக கூறி, தாராபுரத்துக்கு மகேந்திரன் வந்தார்.

கடந்த ஆக.20ம் தேதி, நண்பர்களுடன் குளித்து கொண்டிருந்தவர் திடீரென நீரில் மூழ்கினார். நண்பர்கள், அவரை தேடி கண்டுபிடித்து தனியார் ஆம்லென்ஸ் மூலம் தாராபுரம் அரசு ஆஸ்பத்திக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.

கல்லுாரி நிர்வாகம் சார்பில், நஷ்ட ஈடாக, 5 லட்சம் ரூபாய் தருவதாக கூறியதால், உடலை பெற்று சென்று மாணவனின் சொந்த ஊரில் அடக்கம் செய்தனர். இதற்கிடையில் அந்த தொகையை கல்லுாரி நிர்வாகத்திடம் இருந்து பெற்றுதருமாறு, மாணவனின் பெற்றோர், தாராபுரம் கோட்டாட்சியரிடம் மனு வழங்கினர்.

Updated On: 3 Dec 2021 2:45 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மீண்டும் 75,000 புள்ளிகளை எட்டிய சென்செக்ஸ் 22,700க்கு மேல் நிஃப்டி
  2. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னவளுடனான பயணம் தொடர்கிறது..!
  3. லைஃப்ஸ்டைல்
    வானத்து சல்லடையில் மேகம் ஊற்றிய நீர், மழை..!
  4. அரசியல்
    5 ஆண்டுகள் தூங்கிய ஜெகன் அண்ணனை வறுத்தெடுத்த தங்கை..!
  5. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 3வது நாளாக 82 கன அடியாக நீடிப்பு
  6. லைஃப்ஸ்டைல்
    ரமலான் காலத்தில் உடல் பலமும், மன வலிமையும்
  7. பட்டுக்கோட்டை
    வயலில் பாசி படர்ந்தால் நெல் எப்படி சுவாசிக்கும்? எப்படி சத்துக்களை...
  8. லைஃப்ஸ்டைல்
    கஷ்டங்கள் யாவும் கடந்து போகும்.. தோல்வியா? தூசிதான்!
  9. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 173 கன அடியாக அதிகரிப்பு
  10. ஈரோடு
    ஈங்கூர் இந்துஸ்தான் கல்லூரியில் மாநில கைப்பந்து முகாம் நிறைவு விழா