Begin typing your search above and press return to search.
தாராபுரம் நகராட்சியுடன் இணைகிறதா, கவுண்டச்சிபுதுார் ஊராட்சி?
தாராபுரம் நகராட்சியுடன், கவுண்டச்சிபுதுார் மற்றும் நஞ்சியம்பாளையம் ஊராட்சிகளை இணைக்க வேண்டும் என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
HIGHLIGHTS
தாராபுரம் நகராட்சியுடன், கவுண்டச்சிபுதுார் மற்றும் நஞ்சியம்பாளையம் ஊராட்சிகளை இணைக்க வேண்டும்' என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் நகராட்சி மன்ற கூட்டம், நேற்று நடந்தது. தலைவர் பாப்பு கண்ணன் தலைமை வகித்தார். இதில், நகராட்சியின் எல்லையை விரிவுபடுத்தவும், நகராட்சியின் வருவாயை பெருக்கி, சிறப்புநிலை அந்தஸ்டன் கூடிய நகராட்சியாக மாற்றவும், அருகேயுள்ள கவுண்டச்சிபுதுார் மற்றும் நஞ்சியம்பாளையம் ஊராட்சிகளை, நகராட்சியுடன் இணைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.