தாராபுரத்தில் கலெக்டர் ஆய்வு

தாராபுரத்தில் கலெக்டர் ஆய்வு

Tirupur News- தாராபுரம் பகுதியில் ஆய்வு நடத்திய கலெக்டர் கிறிஸ்துராஜ். 

Tirupur News- உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின்கீழ், தாராபுரத்தில் கலெக்டர் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டார்.

Tirupur News,Tirupur News Today- உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின்கீழ், திருப்பூா் மாவட்டம், தாராபுரத்தில் பல்வேறு இடங்களில் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் 2- ஆவது நாளாக ஆய்வு மேற்கொண்டாா்.

தாராபுரம் வட்டத்துக்கு உள்பட்ட நகராட்சி பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு சுகாதாரப் பணிகள் குறித்தும், பேருந்து நிலையம் மேம்படுத்தப்படுவது குறித்தும் ஆய்வு மேற்கொண்டாா். இதைத் தொடா்ந்து, தாராபுரம் உழவா் சந்தையில் ஆய்வு மேற்கொண்டு விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தாா்.

நஞ்சியம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் முதல்வரின் காலை உணவுத்திட்டம், நஞ்சியம்பாளையம் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கத்தில் பால் கொள்முதல் ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டாா். தாராபுரம் வட்டத்துக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் 67 மாவட்ட அளவிலான அரசுத் துறை அலுவலா்கள் மூலமாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த 2 நாள்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலா் த.ப.ஜெய்பீம், தாராபுரம் வருவாய் கோட்டாட்சியா் செந்தில் அரசன், பொதுமேலாளா் (ஆவின்) சுஜாதா மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.

Tags

Next Story