/* */

தாராபுரம் தொகுதியில் பா.ஜ.க தலைவர் எல்.முருகன் வேட்பு மனு தாக்கல் செய்தார்

தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார்.

HIGHLIGHTS

தாராபுரம் தொகுதியில் பா.ஜ.க தலைவர்  எல்.முருகன் வேட்பு மனு தாக்கல் செய்தார்
X

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தனி தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாஜக வேட்பாளராக தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் வேட்புமனு தாக்கல் செய்ய தாராபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ள பாஜக தேர்தல் பணிமனையில் இருந்து வாகனம் மூலம் பேரணியாக சென்றார்.

இவருக்கு அதிமுக, பாஜக தொண்டர்கள் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இருபுறமும் கூடி நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர். பேரணியில் மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி, அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், முன்னாள் எம்.பி மகேந்திரன், பாஜக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தாராபுரம் சார் ஆட்சியர் அலுவலகத்திற்கு 100 அடி தொலைவில் அனைவரும் தடுத்து நிறுத்தப்பட்டதால் எல்.முருகன், அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், முன்னாள் எம்பி மகேந்திரன் என மூவர் மட்டும் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளே சென்றனர்.

தாராபுரம் சார் ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான பவன்குமாரிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். பின்னர் டெப்பாசிட் தொகையாக 5 ஆயிரம் ரூபாயை அனைத்து தொகுதியிலும் இருந்து தொண்டர்களிடமிருந்து நன்கொடையாக பெறப்பட்ட 2, 5, 10 ரூபாயாக செலுத்தினார்.



Updated On: 18 March 2021 9:07 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...