/* */

தாராபுரத்தில் சமரச மக்கள் நீதிமன்றம் குறித்து விழிப்புணர்வு பேரணி

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் சமரச மக்கள் நீதிமன்றம் குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

HIGHLIGHTS

தாராபுரத்தில் சமரச மக்கள் நீதிமன்றம் குறித்து விழிப்புணர்வு பேரணி
X

தாராபுரம் வட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில், மக்கள் நீதிமன்றம் குறித்து  விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. 

நீதிமன்றங்களில் வழக்குகள் தேங்குவதை தவிர்க்கவும், உரிய நேரத்தில் நீதி கிடைக்கவும், நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வழக்குகளில் எளிதாக தீர்வு காணவும், லோக் அதலாத் எனப்படும் 'சமரச மக்கள் நீதிமன்றம்' நடத்தப்படுகிறது.

இதுதொடர்பான, கண்காட்சி, பேரணி நடைபெற்றது. பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தாராபுரம் கூடுதல் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்ற வளாகத்தில் சமரச மக்கள் நீதிமன்றம் சம்பந்தமான விழிப்புணர்வுக் ஒலி ஒளி காட்சி காண்பிக்கப்பட்டது.

முன்னதாக, தாராபுரம் வட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு நீதிமன்ற வளாகத்தில் நீதிபதி தர்மபிரபு, மரக்கன்று நட்டு வைத்தார். பின், மக்கள் செய்தி தொடர்பு வாகனத்தின் மூலம் விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடக்கி வைத்தார்.

இதில், மூன்றாவது கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி சி.குமார் சரவணன், குற்றவியல் நீதிமன்றம் நடுவர் பாபு, மாவட்ட உரிமையியல் நீதிபதி செல்வி ஏக்னஸ் ஜெபகிருபா உட்பட, கல்லூரி மாணவ, மாணவியர், தன்னார்வலர்கள், போலீசார் பங்கேற்றனர்.

Updated On: 11 April 2022 11:45 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...