/* */

தாராபுரத்தில் வாகனச்சோதனையில் ரூ.40 லட்சம் பணம் பறிமுதல் - ஹவாலா பணமா என விசாரணை

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் வாகனச்சோதனையில் 40 லட்சம் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

தாராபுரத்தில் வாகனச்சோதனையில் ரூ.40 லட்சம் பணம் பறிமுதல் - ஹவாலா பணமா என விசாரணை
X

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே, பொள்ளாச்சி ரோட்டில் போலீசார் வாகனச்சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, அந்தவழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனையிட்டனர். இதில், லாரியில் இருந்த ஒரு பண்டலில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது தெரியவந்தது.

அந்த பணம் குறித்து டிரைவரிடம் போலீசார் விசாரித்தனர். அந்த பணத்தை பறிமுதல் எண்ணியபோது ரூ.39 லட்சத்து 75ஆயிரம் இருந்தது. பணம் குறித்து லாரி டிரைவர் கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த ராகவன் ( 56) என்பவரை அழைத்து வந்து விசாரித்தனர்.

விசாரணையில் கரூர் மாவட்டம் புலியூரில் உள்ள தனியார் சிமெண்ட் ஆலையில் இருந்து சிமெண்ட் மூட்டைகளை லாரியில் ஏற்றிக்கொண்டு கேரள மாநிலம் கோழிக்கோடுக்கு சென்றதாகவும், நண்பர் ஒருவர் தன்னிடம் ரூ.39 லட்சத்து 75ஆயிரம் பணத்தை வழங்கி,கோழிக்கோட்டில் உள்ள உறவினர் ஒருவரிடம் கொடுத்து விட சொன்னதாக தெரிவித்தார்.

பறிமுதல் செய்யப்பட்டவை ஹவாலா பணமா என்பது குறித்து தாராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேந்திரன், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெயகுமார், கார்த்திக்கேயன் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 11 Jun 2021 2:11 AM GMT

Related News

Latest News

  1. திண்டுக்கல்
    நாளை முதல் கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் இடி மின்னலுடன் கோடை மழை! வெப்பம் தணிந்ததால் மக்கள்...
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. செங்கம்
    உடல் உறுப்புகள் தானம் செய்தவரின் உடலுக்கு ஆட்சியர் நேரில் மரியாதை
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 மையங்களில் நீட் தேர்வு
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  7. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை மின்சார ரயில் அலைமோதும் மக்கள் கூட்டம்; கூடுதல்...
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  9. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  10. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்