/* */

தாராபுரம் அருகே கார் மோதி கல்லூரி மாணவி உயிரிழப்பு

கார் விபத்தில் மாணவி பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

தாராபுரம் அருகே கார் மோதி கல்லூரி மாணவி உயிரிழப்பு
X

பைல் படம்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகேயுள்ள கணபதிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம், சாக்கு வியாபாரி. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் இறந்து விட்டார். இவரது மகள் விஜயஸ்ரீ (வயது19). இவர் தாயார் அரவணைப்பில் வளர்ந்து வந்தார். விஜயஸ்ரீ தாராபுரம் பைபாஸ் சாலையில் உள்ள தனியார் கலைக்கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

இவர் நேற்று மாலை கல்லூரி முடிந்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தார். தாராபுரம் ஐ.டி.ஐ., கல்லூரி அருகே வந்த போது எதிரே வந்த சொகுசு கார் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த விஜயஸ்ரீயை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதையடுத்து மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே விஜயஸ்ரீ உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக காரை ஓட்டி வந்த கோவையை சேர்ந்த அஸ்வின் (30) என்பவரை தாராபுரம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கார் விபத்தில் மாணவி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 4 May 2023 10:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?