/* */

விளைச்சல் குறைந்தது: விலை அதிகரித்தது!

நிலக்கடலை விளைச்சல் குறைந்த நிலையில், தேவை அதிகரித்ததால், விலை உயர்ந்து காணப்பட்டது.

HIGHLIGHTS

விளைச்சல் குறைந்தது: விலை அதிகரித்தது!
X

பைல் படம்.

திருப்பூர் மாவட்டத்தில், அவினாசி, சேவூர், ஈரோடு மாவட்டத்தில், கோபி, அந்தியூர், நம்பியூர் உள்ளிட்ட பல இடங்களில் நிலக்கடலை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் அவினாசி, சேவூரில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில், வாரந்தோறும் நடக்கும் ஏலத்தில், நிலக்கடலை விற்பனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த, செப்டம்பர் மாதம் துவங்கிய நிலக்கடலை அறுவடை சீசன், தற்போது முடிவுக்கு வந்தது. இருப்பினும், ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்தில், நிலக்கடலைக்கான தேவை அதிகரித்து காணப்பட்டது. வியாபாரிகள், அதிக விலைக்கு ஏலம் கோரினர்.

கோபி, அந்தியூர் பகுதிகளில் உள்ள விவசாயிகள், நிலக்கடலையை இருப்பு வைத்து, விற்பனைக்கு எடுத்து வந்தனர். இதனால், முதல் தர நிலக்கடலைக்கு, குவிண்டாலுக்கு அதிகபட்சம், 7,000 ரூபாய் வரை விலை கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Updated On: 16 Nov 2021 1:45 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    2024-ல் மருத்துவ உலகை புரட்டிப்போடும் சிறந்த படிப்புகள்
  2. லைஃப்ஸ்டைல்
    திருமண நாள் வாழ்த்துக்கள்: அன்பைப் பொழிந்து, மகிழ்ச்சியைச் சொல்லும்...
  3. லைஃப்ஸ்டைல்
    "குட் நைட்" மட்டும் சொல்லாதீங்க! தமிழ்ல இப்படி சொல்லுங்க!
  4. வீடியோ
    மயிலாடுதுறையில் பலத்த காற்றுடன் மழை ! 50 ஆண்டுகள் பழமையான புளியமரம்...
  5. லைஃப்ஸ்டைல்
    என் அப்பா, என் பெருமை! பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    என்னில் பாதியானவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  7. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 207 கன அடியாக அதிகரிப்பு
  8. லைஃப்ஸ்டைல்
    பக்ரீத் வாழ்த்து சொல்வோம் வாங்க..!
  9. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 232 கன அடியாக அதிகரிப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை வாழ்த்துக்கள் தமிழ்: 50 பொன்மொழிகளுடன்