அவிநாசி அரசு பள்ளியில், உலக மாற்றுத் திறனாளிகள் தின விளையாட்டு போட்டி

அவிநாசி அரசு பள்ளியில், உலக மாற்றுத் திறனாளிகள் தின விளையாட்டு போட்டி
X

Tirupur News-உலக மாற்றுத்திறனாளிகள் தினம் (கோப்பு படம்)

Tirupur News-அவிநாசியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, விளையாட்டு போட்டி நடத்தப்பட்டது.

Tirupur News,Tirupur News Today- அவிநாசி அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உலக மாற்றுத் திறனாளிகள் தின நிகழ்சி நடந்தது.

அவிநாசி ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் பயிலும் மாற்றுத் திறன் மாணவ, மாணவிகளுக்காண திறன் ஊக்கப்போட்டிகள் நடத்தப்பட்டன. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட உதவித் திட்ட அலுவலா் (ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி) அண்ணாதுரை தலைமை வகித்தாா். வட்டாரக் கல்வி அலுவலா் திருநாவுக்கரசு, நல்லது நண்பா்கள் அறக்கட்டளை நிா்வாகிகள் ரவிக்குமாா், ஜீவானந்தம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

போட்டிகளில் சிறப்பித்த மாணவ, மாணவிகளுக்கு அவிநாசி ஜேஏஎம் அண்ட் கோ நிறுவன மேலாளா் காா்த்திகேயன் பரிசு வழங்கினாா். இதில் மேற்பாா்வையாளா், ஆசிரியா், பயிற்றுநா்கள், சிறப்பாசிரியா்கள், இயன்முறை மருத்துவா்கள் உள்பட 30-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறன் மாணவா்கள் பங்கேற்றனா்.

மாநகராட்சி பள்ளியில் நடந்த விழா

அவிநாசியை அடுத்துள்ள 15வேலம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் உலக மாற்றுத் திறனாளிகள் தின நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை வகித்தாா். நிகழ்ச்சி தொடக்கமாக மாணவ, மாணவிகளின் சைகை மொழி தமிழ்த்தாய் வாழ்த்து, விழிப்புணா்வு நாடகம் உள்ளிட்டவை நடைபெற்றன.

பின்னா் கலெக்டர் கிறிஸ்துராஜ் பேசியதாவது,

மாற்றுத் திறனாளிகள் தினத்தையொட்டி, திருப்பூா் மாவட்டத்துக்கு உள்பட்ட 1,331 அரசு, அரசு உதவி பெறும் அனைத்துப் பள்ளிகளிலும் காலை வணக்கக் கூட்டத்தில் சைகை மொழி தமிழ்த்தாய் வாழ்த்து, உறுதிமொழி ஏற்பு நடைபெற்றது. மேலும், மாணவ, மாணவிகள் எடுத்துக் கொள்ளப்பட்ட உறுதிமொழிபோல மாற்றுத் திறனாளி குழந்தைகள் வெற்றி பெற நாம் அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கீதா, மாவட்ட உதவித் திட்ட அலுவலா் (ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி) அண்ணாதுரை, மாவட்ட ஒருங்கிணைப்பாளா் பாலசுந்தரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Tags

Next Story
மல்லசமுத்திரத்தில் கொப்பரை வர்த்தகம்: விவசாயிகள் சந்தித்த நன்மைகள்