/* */

சிறுமிக்கு 'வாட்ஸ் ஆப்' தொல்லை: பீகார் தொழிலாளி அடித்துக் கொலை

அவினாசி அருகே, சிறுமிக்கு 'வாட்ஸ் ஆப்' மூலம் தொல்லை கொடுத்த பீகார் மாநிலத் தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

சிறுமிக்கு வாட்ஸ் ஆப் தொல்லை: பீகார் தொழிலாளி அடித்துக் கொலை
X

திருப்பூர் மாவட்டம், அவினாசி அருகே உள்ள தெக்கலூரில் தனியார் பனியன் நிறுவனத்தில் தங்கி பணியாற்றி வந்தவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ரித்தீஷ்யாதேவ் மகன் அனில்குமார்(22). இவர், தெக்கலூர் அருகே எம்.நாதம்பாளையத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி படித்து வரும் கோவைச் சேர்ந்த சிறுமிக்கு, தொடர்ந்து வாட்ஸ் ஆப் மூலம் ஆபாச செய்தி அனுப்பி, வந்தாக கூறப்படுகிறது.

இதையறிந்த சிறுமியின் உறவினர்கள், அனில்குமாரை எச்சரித்தும் அவர் கேட்காததால், சிறுமியின் உறவினர்கள் அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். பலத்த காயமடைந்த அனில்குமார், கோவை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வழக்குபதிவு செய்த அவினாசி காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டு, அனில்குமாரை தாக்கி கொலை செய்த, சிறுமியின் உறவினர்களான கோவையச் சேர்ந்த குமாரசாமி மகன் ரவி(40), ராஜூ மகன் பாபு(40), எம்.நாதம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பழனிசாமி மகன் ரஞ்சித்(23), செல்வராஜ் மகன் மணிகண்டன்(23) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

Updated On: 23 Nov 2021 12:30 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்
  2. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை வானில் பறக்க காத்திருக்கும் ஜோடிகளுக்கு வாழ்த்துகள்..!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பும், இன்பமும் நிறைந்த இல்லற வாழ்வுக்கான நல்வாழ்த்துக்கள்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு தேசத்து இளவரசிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  6. கும்மிடிப்பூண்டி
    கும்மிடிப்பூண்டி: இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ.2 லட்சம்
  7. லைஃப்ஸ்டைல்
    தமிழ் SMS மூலம் பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோமா?
  8. வீடியோ
    PT Sir-க்கும் 😍💖English Teacherக்கும் காதல் ! கல்யாணம் செஞ்ச வச்ச...
  9. லைஃப்ஸ்டைல்
    நண்பா... என் இதயத்தில் எப்போதும் நீ இருப்பாய்! - பெஸ்டிக்கு பிறந்த...
  10. நாமக்கல்
    நாமக்கல்லில் 23ம் தேதி மண்புழு உரம் தயாரிக்க இலவச பயிற்சி