/* */

தாசபாளையத்தில் கால்நடைகளுக்கு சிகிச்சை முகாம்

அன்னுார் தாசபாளையத்தில் நடந்த முகாமில் ஆயிரத்து 200 கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

HIGHLIGHTS

தாசபாளையத்தில் கால்நடைகளுக்கு சிகிச்சை முகாம்
X

கால்நடை பராமரிப்புத் துறை சார்பில், கஞ்சப்பள்ளி ஊராட்சி, தாசபாளையத்தில் முகாம் நடந்தது. ஆடு, மாடு, கோழி, நாய் உள்ளிட்ட 1,200 கால்நடைகளுக்கு, சிகிச்சை அளிக்கப்பட்டது. குடற்புழு நீக்கம், சினை ஊசி போடுதல், வெள்ளைக் கழிசல் நோய்க்கு தடுப்பூசி போடுதல், உன்னி மருந்து அளித்தல் உள்ளிட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.

கால்நடை மருத்துவர் யசோதா பேசுகையில், "கால்நடைகளுக்கு குறிப்பிட்ட இடைவெளியில் தடுப்பூசி போடவேண்டும். கால்நடை பராமரிக்கும் இடத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். சத்தான, தரமான, தீவனங்களை கால்நடைகளுக்கு வழங்க வேண்டும்" என்றார்.

முகாமில், சிறந்த மூன்று கிடாரிகளுக்கும், கால்நடை மேலாண்மை சிறப்பாக செய்த மூவருக்கும் ஊராட்சி தலைவர் சித்ரா பரிசு வழங்கினார். கால்நடை ஆய்வாளர் ரவி உட்பட பலர் பங்கேற்றனர்.

Updated On: 12 Jan 2022 10:15 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    ஓய்வூதிய பலன்கள் கிடைப்பதை உறுதி செய்ய அரசு அறிவுறுத்தல்..!
  2. அரசியல்
    நரேந்திரமோடி- வாஜ்பாய் ஒற்றுமைகள் என்ன?
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. நாமக்கல்
    சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் கோயில்களில் சிறப்பு அபிஷேகம்
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. நாமக்கல்
    ப.வேலூர் டவுன் பஞ்சாயத்து சார்பில் பொதுமக்களுக்கு தண்ணீர் பந்தல்...
  7. நாமக்கல்
    கூட்டுறவு சங்கத்தில் ரூ.1.17 கோடி மோசடி: செயலாளர் உட்பட 2 பேர் கைது
  8. குமாரபாளையம்
    குமாரபாளையம் விநாயகர், பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
  9. ஈரோடு
    கொளுத்தும் கோடை வெயில்: ஈரோட்டில் நேற்று 108.32 டிகிரி வெயில் பதிவு
  10. காஞ்சிபுரம்
    விடாமுயற்சியும் தன்னம்பிக்கைக்கு உதாரணமாக திகழ்கிறது நிலவொளிப் பள்ளி -...