/* */

அவினாசியில் வருகிறது 'டைடல் பார்க்'!

திருப்பூர் மாவட்டம், அவினாசியில் ‘மினி டைடல் பார்க்’ அமைய உள்ளது.

HIGHLIGHTS

அவினாசியில் வருகிறது டைடல் பார்க்!
X

பைல் படம்.

தமிழகத்தில், அதிகளவிலான வேலை வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில், உள்நாடு மட்டுமின்றி, உலக நாடுகளில் உள்ள நிறுவனங்களை தமிழகத்தில் தொழில் துவங்கவும், முதலீடு செய்யவும் ஊக்குவிப்பு வழங்கி வருகிறது. சமீபத்தில் கூட மாநில முதல்வர் மு.க.ஸ்டாலின், துபாய் சென்று, 2,600 கோடி ரூபாய்க்கு முதலீடுகளை ஈர்த்துள்ளார்.

குறிப்பாக, இன்றைய தலைமுறையினர் அதிகம் விரும்பும், தகவல் தொழில்நுட்பம் (ஐ.டி.,) மற்றும் டெக்னாலஜி துறையில் வேலை வாய்ப்புகளை அதிகளவில் உருவாக்கும் நோக்கில், கட்டமைப்பை உருவாக்க திட்டம் வகுக்ககப்பட்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக, தமிழகத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் தரத்தில் உள்ள நகரங்களில் 'டைடல் பார்க்' உருவாக்கப்படும் என, கடந்தாண்டு, ஆகஸ்ட் மாதம் நடந்த சட்டசபை கூட்டத் தொடரில், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருந்தார்.

அதனடிப்படையில், திருப்பூர் மாவட்டம், அவிநாசி தாலுகாவுக்கு உட்பட்ட ராக்கியபாளையத்தில் 'டைடல் பார்க்' அமைய இருப்பதாக, தகவல் வெளியாகியுள்ளது. கட்டுமானப்பணி, எலக்ட்ரிக்கல் வேலை, பிளம்பிங் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு, 'சென்னை டைடல் பார்க்' சார்பில் டெண்டர் கோரியுள்ளது.

Updated On: 29 March 2022 12:45 PM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணிகளின் இன்றைய நீர்மட்டம்
  2. கல்வி
    பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்: மாவட்டவாரியாக தேர்ச்சி விகிதம்
  3. லைஃப்ஸ்டைல்
    ‘தூக்கத்தில் வருவதல்ல கனவு; உன்னை தூங்க விடாமல் செய்வதே கனவு’ - கலாம்...
  4. பூந்தமல்லி
    தண்ணீர் தொட்டில் விழுந்து 3 வயது சிறுமி உயிர்ழப்பு
  5. கல்வி
    பரீட்சையில் Fail ஆகிட்டா, தோத்துட்டோம்ன்னு அர்த்தமா...?
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. ஆன்மீகம்
    காக்கும் கடவுள் கணேசனை நினை... கவலைகள் அகல அவன் அருள் துணை!
  8. கோவை மாநகர்
    கோவையில் பத்தாம் வகுப்பில் 94.01 சதவீதம் பேர் தேர்ச்சி
  9. கல்வி
    தமிழ்நாடு 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் : 91.55% பேர் தேர்ச்சி!...
  10. வீடியோ
    🤐ரகசியத்தை இப்போ சொல்ல முடியாது |🤔Savukku வழக்கறிஞர் தடாலடி !...