ஐயா, டாஸ்மாக் கடையை மூடாதீங்க... கலெக்டரிடம் 'இப்படியும்' ஒரு கோரிக்கை

Tasmac News Today Tamil - திருப்பூர் அருகே மேற்குபதியில் உள்ள டாஸ்மாக் கடையை மூடக்கூடாது என்று, கலெக்டரிடம் 'குடி'மகன்கள் மனு அளித்தனர்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
ஐயா, டாஸ்மாக் கடையை மூடாதீங்க...  கலெக்டரிடம் இப்படியும் ஒரு கோரிக்கை
X

திருப்பூர் அருகே மேற்குபதியில் உள்ள டாஸ்மாக் கடையை மூடக்கூடாது என்று, கலெக்டரிடம்  மனு அளிக்கப்பட்டது.

Tasmac News Today Tamil - திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் வினீத் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் திருப்பூர் அருகே உள்ள மேற்குபதியை சேர்ந்த விவசாய கூலி தொழிலாளர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் வந்து மனு அளித்தனர். அந்த மனுவில், 'மேற்குபதியில் டாஸ்மாக் மதுக்கடை கடந்த நான்கு ஆண்டுகளாக யாருக்கும் இடையூறு இல்லாமல் செயல்படுகிறது. பள்ளி, கல்லூரி எதுவும் அருகில் இல்லை. குடியிருப்பு பகுதிகளும் அருகில் இல்லை.

இந்நிலையில் சிலரின் அரசியல் காழ்ப்புணர்ச்சியால், டாஸ்மாக் கடையை மூட முயற்சி நடக்கிறது. இந்த கடையை மூடினால் விவசாய கூலி தொழிலாளர்கள், மது அருந்துவோர், ஏழு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள குன்னத்துார் மற்றும் பெருமாநல்லுாரில் உள்ள மதுபான கடைகளுக்கு செல்ல வேண்டும். டாஸ்மாக் கடையை மூடினால் போலி மதுபானங்கள் மற்றும் கள்ளச்சாராயம் விற்பது போன்ற சமூக விரோத செயல்கள் நடக்கும் ஆபத்து உள்ளது.

எனவே, டாஸ்மாக் கடையை மூடாமல் தற்போதைய இடத்திலேயே நிரந்தரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும்' என்று கூறியுள்ளனர்.

டாஸ்மாக் கடைகளால் பொதுமக்களுக்கு தொந்தரவு, கடையை உடனடியாக மூட வேண்டும் என்று, பல இடங்களில் பொதுமக்கள் மனு அளித்து வரும் நிலையில், டாஸ்மாக் கடையை மூடக்கூடாது என்று மனு கொடுத்த 'குடி'மகன்களை பார்த்த பலரும் ஆச்சரியப்பட்டனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 9 Aug 2022 9:49 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    சென்னை புயல் வெள்ள நிவாரணத்திற்கு மத்திய அரசு ரூ.450 கோடி ஒதுக்கீடு
  2. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் 8 தாலுகாக்களில் ரேசன் கார்டு குறைதீர்
  3. நத்தம்
    நத்தம் அருகே கால்நடை மருத்துவ முகாம்..!
  4. திருவள்ளூர்
    கன்னிகைப்பேர் அருகே மழை நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து...
  5. திருவள்ளூர்
    குடிநீர்,மின்சாரம் வழங்க பொதுமக்கள் சாலை மறியல்..!
  6. திருவள்ளூர்
    வதந்திகளை நம்ப வேண்டாம்: புழல் ஏரியை ஆய்வு செய்த பின் அமைச்சர்...
  7. திருப்பரங்குன்றம்
    திருப்பரங்குன்றம் அருகே சாலை அமைக்க பூமி பூஜை..!
  8. தென்காசி
    தென்காசியில் டிச.9 சிறப்பு தனியார் வேலை வாய்ப்பு முகாம்: மாவட்ட...
  9. தென்காசி
    குற்றாலம் கோவிலுக்கு பூஜை கட்டளைக்காக இஸ்லாமியர் வழங்கிய கொடை..!
  10. சோழவந்தான்
    கொண்டையம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் அடிப்படை வசதி இல்லை: பள்ளி...