/* */

புலம்பெயர் தமிழர்களுக்கு சட்ட உதவி விழிப்புணர்வு

தாயகம் திரும்பிய இலங்கை தமிழர்களுக்கு, இலவச சட்ட உதவி முகாம் நடத்தப்பட்டது.

HIGHLIGHTS

புலம்பெயர் தமிழர்களுக்கு சட்ட உதவி விழிப்புணர்வு
X

அவிநாசியில் இலங்கைத் தமிழர்களுக்கான இலவச சட்ட உதவி விழிப்புணர்வு முகாமில் மாவட்ட முதன்மை நீதிபதி நடராஜன் பேசினார். 

தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் வெள்ளி விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு, திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் அவினாசி சட்டப்பணிகள் குழு சார்பில், புலம்பெயர் தமிழர்களுக்கான விழிப்புணர்வு முகாம், அவிநாசி கலை அறிவியல் கல்லூரியில் நடந்தது.

அவிநாசி சட்டப்பணிகள் குழு சார்பு நீதிபதி சுரேஷ்குமார் வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் ஹேமலதா பேசினார். தலைமை குற்றவியல் நீதிபதி புகழேந்தி, அவினாசி குற்றவியல் நீதித்துறை நடுவர் விபிசி, மாவட்ட உரிமையியல் நீதிபதி அப்சல் பாத்திமா, டி.எஸ்.பி., பவுல்ராஜ், மூத்த வக்கீல்கள் சின்னசாமி, சுப்ரமணியம், ஈஸ்வரன் ஆகியோர் பேசினர்.

புலம்பெயர் தமிழர்களின் பிரதிநிதியாக புஷ்பராஜ், கோரிக்கையை முன்வைத்தார். சட்டப்பணிகள் குழு உதவியுடன் பெறப்பட்ட முதல்வரின் காப்பீடு திட்ட சான்றிதழை முதன்மை மாவட்ட நீதிபதி சொர்ணம் நடராஜன் வழங்கி, புலம்பெயர் தமிழர்களுக்கான சட்ட வாய்ப்பு குறித்து பேசினார். மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் திருநாவுக்கரசு நன்றி கூறினார்.

Updated On: 3 Nov 2021 5:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது