/* */

திருப்பூர் அருகே ரூ. 14 கோடி மதிப்புள்ள கோவில் நிலம் மீட்பு

அவினாசியில், 14 கோடி ரூபாய் மதிப்புள்ள கோவில் நிலத்தை இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டனர்

HIGHLIGHTS

திருப்பூர் அருகே ரூ. 14 கோடி மதிப்புள்ள கோவில் நிலம் மீட்பு
X

அவினாசியில், 14 கோடி ரூபாய் மதிப்புள்ள கோவில் நிலத்தை, இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டனர்

அவினாசியில், 14 கோடி ரூபாய் மதிப்புள்ள கோவில் நிலத்தை, இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டனர்.

திருப்பூர் மாவட்டம், அவிநாசி தாலுகா, முறியாண்டம்பாளையத்தில் கன்னிமார் கோவிலுக்கு சொந்தமான, 3.61 ஏக்கர் நிலம்; தத்தனுார் அடிபெருமாள் கோவிலுக்கு சொந்தமான, 10.25 ஏக்கர் நிலம் தனியார் ஆக்கிரமிப்பில் இருந்தன.

தண்டுக்காரன்பாளையம் தொட்டியனுார் முட்டத்துராயர் கோவிலுக்கு சொந்தமான 6 ஏக்கர் நிலம்; தொட்டக்களம் புதுார் விநாயகர் கோவிலுக்கு சொந்தமான 7.32 ஏக்கர் நிலம்; கருவலுார் தர்மராஜா கோவிலுக்கு சொந்தமான 3.94 ஏக்கர் நிலம் ஆகியனவும் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தன.மொத்தம், 14.28 கோடி ரூபாய் மதிப்பிலான, 31.12 ஏக்கர் பரப்பளவிலான கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பாளர்கள் காலி செய்ய வேண்டும் என்று திருப்பூர் மாவட்ட இந்து அறநிலையத் துறையினர் நோட்டீஸ் வழங்கியிருந்தனர். அந்நிலங்களை அறநிலையத்துறை உதவி கமிஷனர் செல்வராஜ், தாசில்தார் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் கையகப்படுத்தி, அங்கு அறிவிப்பு வைத்தனர்.

Updated On: 5 Feb 2022 1:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றுவோம்..! வல்லமை வளரும்..!
  2. ஆன்மீகம்
    விநாயகனே... வினை தீர்ப்பவனே! - இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளை...
  3. சினிமா
    Indian 2 டிரைலர் எப்ப ரிலீஸ் தெரியுமா?
  4. சிங்காநல்லூர்
    போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அடமானம் வைத்து மோசடி செய்ததாக புகார்
  5. லைஃப்ஸ்டைல்
    பிறப்பை கொண்டாடுவோம் வாங்க..! பிறந்தநாள் வாழ்த்து சொல்வோமா..?
  6. வீடியோ
    🔴LIVE : சத்யராஜ் மீண்டும் சர்ச்சை பேச்சு | WEAPON Movie Press Meet...
  7. கோவை மாநகர்
    கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மேற்கூரை சரிந்து விபத்து ; டூவிலர்கள்
  8. கோவை மாநகர்
    இந்து மதம், இந்தி மொழி, இந்தி பேசும் மக்களுக்கு எதிரான கட்சி திமுக :...
  9. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1,192 கன அடியாக அதிகரிப்பு
  10. வால்பாறை
    வால்பாறை சாலையில் பாறைகள் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு