/* */

புதுப்பாளையம் ஊராட்சியில் மழை பாதித்த சாலைகள் சீரமைப்பு

அவினாசி தாலுகா, புதுப்பாளையம் ஊராட்சியில், மழை நீர் தேங்கி பாதிக்கப்பட்ட சாலைகள் சீரமைக்கப்பட்டன.

HIGHLIGHTS

புதுப்பாளையம் ஊராட்சியில் மழை பாதித்த சாலைகள் சீரமைப்பு
X

காந்தி நகர் பகுதியில் சாலை சீரமைக்கப்பட்டது.

அவினாசி தாலுகா, புதுப்பாளையம் ஊராட்சியில், டெங்கு கொசு ஒழிப்புப்பணி, மாஸ் கிளீனிங் பணி உள்ளிட்டவை முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு, பொதுமக்களின் தேவைகள் உடனுக்குடன் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

அவ்வகையில், வஞ்சிபாளையம் காந்தி நகர் பகுதியில் மழைநீர் தேங்கி இருந்த சாலைகள் சரி செய்யப்பட்டுள்ளது. அண்மையில் பெய்த மழையால், காந்தி நகர் பகுதி சாலையில் மழை நீர் தேங்கி, மக்கள் அவதிக்குள்ளாகினர். இது குறித்த தகவல் அறிந்ததும், ஊராட்சித் தலைவர் கே.பி. கஸ்தூரி பிரியா, வார்டு கவுன்சிலர் உள்ளிட்டோர், சாலை சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தினர்.

காந்தி நகர் பகுதியில், மழை நீர் தேங்கியிருந்த சாலை. அடுத்த படம்: சாலை சீரமைக்கப்பட்டுள்ளது.

அதன்பேரில், காந்தி நகர் பகுதியில் குண்டும் குழியுமாக மழை நீர் தேங்கியிருந்த பகுதிகள், பொக்லைன் இயந்திரம் மூலம் சமன்படுத்தப்பட்டு, ரோடு சீரமைக்கப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதி சாலை தற்போது மழை நீர் தேங்காதவாறு, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. புதுப்பாளையம் ஊராட்சி நிர்வாகத்திற்கு, பொதுமக்கள் நன்றி தெரிவித்து கொண்டுள்ளனர்.

Updated On: 21 Dec 2021 4:30 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    சிஏஏ திட்டதின் கீழ் முதல் முறையாக 14 பேருக்கு குடியுரிமைச் சான்றிதழ்
  2. அரசியல்
    ஐஎன்டிஐஏ ஆட்சிக்கு வந்தால் வெளியில் இருந்து ஆதரவு: மம்தா அறிவிப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    அப்பா அம்மாவுக்கு கல்யாண நாள் வாழ்த்து- இப்படிக்கு பிள்ளைகள்..!
  4. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!
  5. லைஃப்ஸ்டைல்
    மல்லிகையே மல்லிகையே தூதாகப் போ - என் காதல் தேவதைக்கு வாழ்த்துகளை...
  6. குமாரபாளையம்
    ஜே.கே.கே. நடராஜா கல்லூரியில் நான் முதல்வன், கல்லூரி கனவு திட்ட முகாம்...
  7. லைஃப்ஸ்டைல்
    என்னுள் நிறைந்தவளுக்கு இதயபூர்வமான பிறந்த நாள் வாழ்த்துகள்!
  8. லைஃப்ஸ்டைல்
    என்னை ஆள்பவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    மனைவிக்கான பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
  10. ஈரோடு
    ஆசனூரில் சாலையில் முறிந்து விழுந்த மூங்கில் மரங்களால் போக்குவரத்து...