/* */

வேட்பாளருடன் ஒருவருக்கு மட்டுமே அனுமதி : விதிமுறைகள் அறிவிப்பு

திருப்பூர் மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது

HIGHLIGHTS

வேட்பாளருடன் ஒருவருக்கு மட்டுமே அனுமதி : விதிமுறைகள்  அறிவிப்பு
X

அவினாசி பேரூராட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அனைத்துக் கட்சி நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம்

திருப்பூர் மாவட்டம், அவினாசி பேரூராட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அனைத்துக் கட்சி நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில், காவல் துணை கண்காணிப்பாளர் பவுல்ராஜ் கூறியதாவது;

தேர்தல் பிரசாரத்திற்கு அனுமதி வேண்டுவோர், சம்மந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் அனுமதி பெற்ற பின், காவல் துறையில் விண்ணப்பம் செய்ய வேண்டும். கொரோனா நடத்தை விதிமுறை அமலில் இருப்பதால், பொதுக்கூட்டம் நடத்த தற்காலிகமாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பொது இடம் மற்றும் சுவர்களில் கட்சி சம்மந்தப்பட்ட விளம்பரம், பேனர்களை அகற்ற வேண்டும்.

பொது சுவர்களில், சுவர் விளம்பரம் மற்றும் பிரசாரம் செய்யக்கூடாது. தனியார் இடத்தில் சுவர் விளம்பரம் செய்யும் போது சம்மந்தப்பட்ட நபர்களிடம் அனுமதி பெற வேண்டும். அதற்கான ஒப்புதல் கடிதத்தை சம்மந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகளிடம் கொடுத்த பின்பே விளம்பரம் செய்ய வேண்டும்.

தங்கள் கட்சி சார்பில் பொது இடத்தில் வைக்கப்பட்டுள்ள கொடி கம்பம், விளம்பர பலகைகளை அகற்ற வேண்டும். கட்சியின் தேர்தல் பணிக்குழு அலுவலகங்களை ஓட்டுச்சாவடியிலிருந்து, 200 மீட்டர் துாரத்தில் அமைக்க வேண்டும். இரவு 9.00 மணிக்கு, பிரசாரத்தை முடித்துக் கொள்ள வேண்டும். வீடு வீடாக பிரசாரம் செய்யும் வேடபாளர்கள், தங்களுடன் ஒருவரை மட்டுமே அழைத்து செல்ல வேண்டும் என்று கூறினார்

Updated On: 6 Feb 2022 1:00 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  2. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  4. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  5. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  6. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  8. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்
  9. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த தமிழ் திருமண வாழ்த்துகள்!
  10. காஞ்சிபுரம்
    ஆதிசங்கரரின் உபதேசங்களை மொழிபெயர்க்க வேண்டும்..!