/* */

கோவிலுக்கு சொந்தமான ரூ.2 கோடி நிலம் மீட்பு

அவினாசி, திருமுருகநாத சுவாமி கோவிலுக்கு சொந்தமான, 2 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டது.

HIGHLIGHTS

கோவிலுக்கு சொந்தமான ரூ.2 கோடி நிலம் மீட்பு
X

மீட்கப்பட்ட திருமுருகநாத சுவாமி கோவில்  நிலம்.

திருப்பூர் மாவட்டம், திருமுருகன்பூண்டியில், மத்திய தொல்லியல் துறைக்கு சொந்தமான, இந்துசமய அறநிலையத்துறையால் பராமரிக்கப்படும் பழமை வாய்ந்த அருள்மிகு திருமுருகநாத சுவாமி திருக்கோவில் உள்ளது. இக்கோவில், 5.96 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதில் 4.50 ஏக்கர் நிலத்தில் கோவில் கருவறை, தீர்த்தக்கிணறுகள், மன நோயாளிகள் தங்கும் மண்டபம், பூங்கா, வாகனங்கள் நிறுத்தும் இடம், கோவில் அலுவலகம் ஆகியவை உள்ளன.

இக்கோவிலுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தை, அப்பகுதியின் முன்னாள் கவுன்சிலர் அய்யப்பன், அவரது உறவினர் சக்திவேல் ஆகியோர் ஆக்கிரமித்திருத்து வைத்துள்ளனர் எனவும், அந்நிலத்தை மீட்க வேண்டும் எனவும், ஊர் மக்கள் சிலர் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், கோவில் நிலங்களை மீட்க தமிழக அரசு வேகம் காட்டி வரும் நிலையில், இந்த புகார் அடிப்படையில், பூண்டி கோவில் செயல் அலுவலர் கங்காதரன், கிளார்க் சக்திவேல் (பொறுப்பு ) ஆகியோர் முன்னிலையில், கோவிலுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலம் மீட்கப்பட்டு, கம்பி வேலி அமைக்கப்பட்டது. 'மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு, 2 கோடி ரூபாயை தாண்டும்' என, கணக்கிடப்பட்டுள்ளது.

Updated On: 25 Nov 2021 2:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  2. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  3. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  4. மேலூர்
    மதுரை அருகே வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பது குறித்த மருத்துவ...
  5. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  6. மேலூர்
    மதுரை அருகே வெள்ளரி பட்டியில் நடைபெற்ற பாரம்பரிய பதவி ஏற்பு விழா
  7. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை
  8. லைஃப்ஸ்டைல்
    சிறுவயதில் தாயை இழந்த தம்பிகள் பலருக்கு, அக்கா தான் அம்மா!
  9. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு
  10. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!