/* */

அவிநாசி விசைத்தறி தொழிலாளர்களுக்கு 13.50% போனஸ் வழங்க உடன்பாடு

அவிநாசி பகுதி விசைத்தறி தொழிலாளர்களுக்கு, போனஸ் வழங்குவது தொடர்பான பேச்சு வார்த்தையில் சுமூக முடிவு எட்டப்பட்டது.

HIGHLIGHTS

அவிநாசி விசைத்தறி தொழிலாளர்களுக்கு  13.50%  போனஸ் வழங்க உடன்பாடு
X

அவிநாசியில் உள்ள விசைத்தறி தொழிலாளர்களுக்கு போனஸ் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் உள்ள மண்டபத்தில், விசைத்தறி தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்குவது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில், அதன் தலைவர் முத்துசாமி, செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தொழிற்சங்கத்தினர் சார்பில், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட பொதுச்செயலாளர் சேகர், செயலாளர் கனகராஜ், விசைத்தறி தொழிலாளர் சங்க மாவட்ட பொதுச்செயலாளர் முத்துசாமி, மாவட்ட துணை செயலாளர் பழனிசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். விசைத்தறி தொழிலாளர்கள் எதிர்கொண்டுள்ள பிரச்னைகள், அவர்களுக்கான தேவைகள், உரிமைகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. பேச்சு வார்த்தையின் முடிவில், விசைத்தறி தொழிலாளர்களுக்கு, 13.50 சதவீதம் போனஸ் வழங்குவது என, உடன்பாடு எட்டப்பட்டது.

Updated On: 27 Oct 2021 12:30 AM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    யானை வழித்தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற வேண்டும் : விவசாயிகள்...
  2. வீடியோ
    🔴LIVE : முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர் சந்திப்பு ||...
  3. ஆன்மீகம்
    தெய்வத்திடம் என்ன கேட்க வேண்டும்?
  4. கோவை மாநகர்
    ஆனைமலையில் குடும்பத்துடன் உறங்கும் காட்டு யானைகளின் புகைப்படம் வைரல்
  5. லைஃப்ஸ்டைல்
    அடே..நண்பா.. வாடா பிறந்தநாள் கொண்டாடலாம்..!
  6. லைஃப்ஸ்டைல்
    வேலைச் சோர்வில் இருந்து மீண்டு வர 9 வழிகள்
  7. கோவை மாநகர்
    நொய்யல் ஆற்றில் நுரையுடன் வெளியேறும் வெள்ள நீர் ; நோய் தொற்று பரவும்...
  8. தேனி
    தேனி அல்லிநகரம் நகராட்சியில் குவிந்து கிடக்கும் குப்பைகள்!
  9. கல்வி
    2024-ல் மருத்துவ உலகை புரட்டிப்போடும் சிறந்த படிப்புகள்
  10. லைஃப்ஸ்டைல்
    திருமண நாள் வாழ்த்துக்கள்: அன்பைப் பொழிந்து, மகிழ்ச்சியைச் சொல்லும்...