கருவலூரில் நாளை மின்தடை

கருவலூரில் நாளை மின்தடை
X

Tirupur News- கருவலூரில் நாளை மின்தடை அறிவிப்பு (மாதிரி படம்)

Tirupur News- அவிநாசியை அடுத்துள்ள கருவலூர் சுற்றுவட்டார பகுதிகளில், நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

Tirupur News,Tirupur News Today- திருப்பூர் மாவட்டம், கருவலூரில் நாளை மின்தடை செய்யப்படுவதாக, மின்வாரியம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, அவிநாசி மின்வாரிய செயற்பொறியாளர் பரஞ்சோதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

கருவலூர் துணை மின் நிலையத்தில் நாளை 15-ம் தேதி(வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை கருவலூர் துணை மின்நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில், மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.

மின்தடை பகுதிகள்; காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை

கருவலூர், அரசப்பம்பாளையம், நைனாம்பாளையம், ஆரியக்கவுண்டம்பாளையம், அனந்தகிரி, எலச்சிப்பாளையம், மருதூர், காளிபாளையம், நம்பியாம்பாளையம், உப்பிலிபாளையம், மனப்பாளையம், காரைக்கால்பாளையம், முறியாண்டம்பாளையம், குரும்பபாளையம், பெரியகாட்டுப்பாளையம், செல்லப்பம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் தடை செய்யப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story
why is ai important to the future