சேவூர், வடுகபாளையம் பகுதிகளில் இன்று மின்தடை

சேவூர், வடுகபாளையம் பகுதிகளில் இன்று மின்தடை
X

Tirupur News,Tirupur News Today- சேவூர், வடுகபாளையம் பகுதிகளில் இன்று மின்விநியோகம் தடை செய்யப்படுவதாக, மின்வாரியம் அறிவித்துள்ளது. (கோப்பு படங்கள்)

Tirupur News,Tirupur News Today- அவிநாசியை அடுத்துள்ள சேவூர் மற்றும் வடுகபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில், இன்று மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.

Tirupur News,Tirupur News Today- திருப்பூர் மாவட்டம், அவிநாசி பகுதியை அடுத்துள்ள சேவூர் மற்றும் வடுகபாளையம் துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளது. எனவே சேவூர், வடுகபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.

இதுகுறித்து, அவிநாசி மின்சார வாரிய செயற்பொறியாளர் பரஞ்சோதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது;

சேவூர் மற்றும் வடுகபாளையம் துணை மின் நிலையப்பகுதிகளில் இன்று (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளது. எனவே இன்று காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை கீழ்காணும் பகுதிகளில், மின்விநியோகம் இருக்காது.

மின்தடை பகுதிகள்; காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை

சேவூர், அசநல்லிபாளையம், பந்தம்பாளையம், சூரிபாளையம், ராமியம்பாளையம், புலிப்பார், போத்தம்பாளையம், சந்தைபுதூர், பாப்பான்குளம், வாலியூர், தண்ணீர் பந்தல்பாளையம், முதலிபாளையம், கூட்டப்பள்ளி, புஞ்சைத்தாமரைக்குளம், சாவக்கட்டுப்பாளையம், சாலைப்பாளையம், நடுவச்சேரி, கருக்கன்காட்டுப்புதூர், தளிஞ்சிபாளையம், மாரப்பம்பாளையம், வடுகபாளையம், அய்யம்பாளையம், நஞ்சைத்தாமரைக்குளம், பிச்சாண்டம்பாளையம், ஒட்டப்பாளையம், ஓலப்பாளையம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் தடை செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story
ai in future agriculture