நடுவச்சேரி ஊராட்சியில் அமைக்கப்படும் நர்சரி

நடுவச்சேரி ஊராட்சியில் அமைக்கப்படும் நர்சரி
X

நர்சரி அமைக்கும் பணியில் ஊழியர்கள்.

நடுவச்சேரி ஊராட்சியில், நர்சரி அமைக்கப்பட்டு வருகிறது.

தேசிய நுாறு நாள் வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ், அவிநாசி வட்டம், நடுவச்சேரி ஊராட்சியில், நாற்று நர்சரி அமைக்கப்பட்டுள்ளது. 30 ஆயிரம் மரக்கன்றுள் உற்பத்தி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக, 15 ஆயிரம் மரக்கன்றுகள் உற்பத்தி செய்வதற்கான ஏற்பாடு நடந்து வருகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் மரக்கன்றுகளை, அவிநாசி வட்டாரத்தில் உள்ள, 31 ஊராட்சிகளுக்கும் வழங்கி, வாய்ப்புள்ள இடங்களில் மரக்கன்று நடும் பணியை ஊக்குவிக்க, ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் முனைப்புக் காட்டி வருகின்றனர்.

Tags

Next Story
ai in future agriculture