/* */

தொற்று குறைய என்ன வழி? அமைச்சர் சொல்வதை கேளுங்க...

‘‘தொற்று முற்றிலுமாக ஒழிய வழி, சமூக இடைவெளி பின்பற்றுவது தான்’’ என செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசினார்.

HIGHLIGHTS

தொற்று குறைய என்ன வழி? அமைச்சர் சொல்வதை கேளுங்க...
X

அவிநாசியில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அதலைமையில் நடந்த மக்கள் குறைகேட்பு முகாமில் குவிந்த மக்கள் 

திருப்பூர் மாவட்டம், அவினாசியில் முதல்வரின், 'மக்கள் குறை கேட்கும் முகாம்' நடத்தப்பட்டது. மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன், தலைமை வகித்தார். செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், மக்களிடம் இருந்து மனுக்களை பெற்று, பேசியதாவது;

கடந்த, 10 ஆண்டுகளில் சரியான திட்டமிடல் இல்லாததால், அரசின் நிதிநிலை மிக மோசமான நிலையில் உள்ளது. இருப்பினும், மக்கள் நலன் சார்ந்த பணிகளில், முதல்வர் கவனம் செலுத்தி வருகிறார். நிதிநிலையும், படிப்படியாக உயர்த்தப்பட்டு வருகிறது. அரசு பொறுப்பேற்ற போது, நம் மாநிலத்தில் தினசரி, 35 ஆயிரம் பேர் தொற்று பாதிப்புக்கு ஆளாகினர். அரசு எடுத்த துரித நடவடிக்கையால், தற்போது, தொற்று பாதிப்போர் எண்ணிக்கை, தினமும், 1,000க்குள் குறைந்திருக்கிறது. இருப்பினும், முழுமையாக குறையவில்லை.

திருப்பூரில், 85 சதவீதம் பேர், முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். 35 சதவீதம் பேர் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். அனைவரும், சரியான கால இடைவெளியில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். சமூக இடைவெளி பின்பற்றுவது, தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்ப்பது மட்டுமே, தொற்றை ஒழிக்க ஒரே வழி. இவ்வாறு, அவர் பேசினார்.

இந்த குறை கேட்கும் முகாமில், நுாற்றுக்கணக்கான மக்கள் சமூகஇடை வெளியின்றி திரண்டிருந்தனர். மனு கொடுக்க முண்டியடித்தனர். இது, அதிகாரிகள் மத்தியில் தர்ம சங்கட நிலையை ஏற்படுத்தியது.

Updated On: 26 Nov 2021 12:00 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்