/* */

அவிநாசியில் தொழிலாளா்களுக்கு தொற்றாநோய் பரிசோதனை

Tirupur News- அவிநாசியில் தொழிலாளா்களுக்கு தொற்றா நோய் பரிசோதனை செய்யப்பட்டது.

HIGHLIGHTS

அவிநாசியில் தொழிலாளா்களுக்கு தொற்றாநோய் பரிசோதனை
X

Tirupur News- அவிநாசியை அடுத்துள்ள தெக்கலூரில் தொழிலாளா்களுக்கு நடந்த தொற்றாநோய் பரிசோதனை முகாமில் பங்கேற்றோர். 

Tirupur News,Tirupur News Today- மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறை, பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை சாா்பில், தெக்கலூரில் கேபிஆா் தொழிற்சாலை தொழிலாளா்களுக்கு தொற்றா நோய் குறித்த பரிசோதனை, மருத்துவ சிகிச்சை நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது.

இதுகுறித்து பொது சுகாதாரத் துறை அலுவலர்கள் கூறியதாவது,

மக்களைத் தேடி மருத்துவம் மூலம் வீடுதேடிச் சென்று மக்களுக்கு தொற்றா நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதைத் தொடா்ந்து பணியிடம் சாா்ந்த தொழிலாளா்களுக்கு தொற்றா நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், திருப்பூா் மாவட்டத்தில் முதல்கட்டமாக 18 நிறுவனங்கள் தோ்வு செய்யப்பட்டு 28,348 தொழிலாளா்களுக்கு சிகிச்சை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக இத்திட்டத்தை தெக்கலூரில் உள்ள கே.பி.ஆா் மில் காா்மெண்ட்ஸ் டிவிஷனில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் காணொலிக் காட்சி மூலம் தொடங்கிவைத்து பேசினாா்.

இதையடுத்து முதல்கட்டமாக 500 தொழிலாளா்களுக்கு சா்க்கரை, ரத்த அழுத்தம், கா்ப்ப வாய் புற்றுநோய், மாா்பக புற்றுநோய், தொழுநோய், மஞ்சள் காமலை உள்ளிட்ட தொற்றா நோய்களுக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதில், மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் ஜெகதீஷ்குமாா், தொற்றாநோய் திட்ட அலுவலா் பாபுசுதாகா், வட்டார மருத்துவ அலுவலா் சக்திவேல், தொழிலகம் பாதுகாப்பு மற்றும் சுகாதார உதவி இயக்குநா் சேதுபதி, அவிநாசி வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் மனோகரன், சுகாதார ஆய்வாளா் பரமன், கேபிஆா் மில் தலைமை மனித வள மேம்பாட்டு துறை மேலாளா் தங்கவேல், மருத்துவா்கள், மருத்துவப் பணியாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Updated On: 10 Jan 2024 9:45 AM GMT

Related News