/* */

திருப்பூர் மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகை வீடுகளிலேயே சிறப்பு தொழுகை

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா முடக்கம் காரணத்தால், ரம்ஜான் பண்டிகையை வீட்டிலேயே தொழுகை நடத்தி கொண்டாடினர்.

HIGHLIGHTS

திருப்பூர் மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகை  வீடுகளிலேயே சிறப்பு தொழுகை
X

கொரோனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால், வழிபாட்டுதலங்களில் மக்கள் கூட கூடாது என அரசு தெரிவித்து உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் கட்டுப்பாடுகள் காரணமாக பள்ளிவாசல்கள், பொது திடல்களில் சிறப்பு தொழுகை நடத்தப்படவில்லை. அவரவர் வீடுகளிலேயே முஸ்லிம்கள் ரம்ஜான் தொழுகை நடத்தினார்கள்.

பள்ளிவாசல்களில் அந்தந்த மதத்தலைவர் மட்டும் தொழுகை நடத்தினர். ரம்ஜான் தொழுகை குறித்து பள்ளிவாசல்களில் ஒலிபெருக்கியில் அறிவிப்பு செய்யப்பட்டதும் வீட்டில் உள்ள ஆண்களில் பெரியவர்கள் தொழுகை நடத்தினார்கள். பெண்கள், குழந்தைகள் தொழுகையில் கலந்து கொண்டனர்.

உறவினர்கள், நண்பர்களை ஆரத்தழுவி ரம்ஜான் வாழ்த்து கூறுவது வழக்கம். பெரும்பாலானவர்கள் விலகி இருந்தே வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர். சிலர் தங்கள் வீட்டில் இருந்தபடி உறவினர்களுக்கு வீடியோ கால் மூலம் ரம்ஜான் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர்.

Updated On: 14 May 2021 6:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு