மாடுகளுக்கான சுகாதார விழிப்புணர்வு முகாம்

மாடுகளுக்கான சுகாதார விழிப்புணர்வு முகாம்
X

கால்நடை மருத்துவ முகாம்.

பழங்கரை ஊராட்சி, கருணைபாளையம் கால்நடை மருத்துவமனை சார்பில், தேவம்பாளையம் கிராமத்தில், மாடுகளுக்கான சுகாதார விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.

கால்நடை பராமரிப்புத்துறை திருப்பூர் கோட்ட உதவி இயக்குனர் பரிமள்ராஜ் தலைமை வகித்து, விவசாயிகளுக்கு விழிப்புணர்வு வழங்கினார். பழங்கரை ஊராட்சி மன்ற தலைவர் கோமதி, உறுப்பினர்கள் சண்முகம், கவுரி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். பசு, எருது, செம்மறியாடுகளுக்கு கருவூட்டல், சினை பரிசோதனை, குடற்புழு நீக்கம், ஆண்மை நீக்கம் உள்ளிட்ட பல பரிசோதனை மற்றும் சிகிச்சைகள் வழங்கப்பட்டன. மாடுகளுக்கு சத்துமாவு வழங்கப்பட்டது. கால்நடை மருத்துவர்கள் சுரேஷ், ராமசந்திரன், சோபியா ஆகியோர் மாடுகளுக்கு சிகிச்சை வழங்கினர். சிறந்த கிடாரி கன்றுகளுக்கு பரிசு, சிறந்த கால்நடை வளர்ப்போருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

Tags

Next Story
ai in future agriculture