/* */

மூதாட்டி காதை அறுத்து கம்மல் பறிப்பு

அவினாசியில் மூதாட்டியின் காதை அறுத்து, கம்மலை பறித்துச் சென்ற நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

மூதாட்டி காதை அறுத்து கம்மல் பறிப்பு
X

பைல் படம்.

அவினாசி கைகாட்டிபுதூர், ராயம்பாளையம் பகுதியில் உள்ள அய்யன்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி (50). இவரது பெரியம்மா பழனாத்தாள் (70). வீட்டின் அருகேயுள்ள குளக்கரையில் மேய்ந்து கொண்டிருந்த தனது மாடுகளை பிடித்து வர, பழனியம்மாள் சென்றுள்ளார்.

அப்போது அங்குள்ள புதர்மறைவில் இருந்து வந்த வாலிபர் ஒருவர், தனது கையில் வைத்திருந்த ஆயுதத்தால், பழனியம்மாளின் காதுகளை அறுத்து, அவர் அணிந்திருந்த, இரண்டரை பவுன் தங்க கம்மலை பறித்துச் சென்றுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, அவினாசியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

புகாரின் பேரில் அவினாசி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான வாலிபரை தேடி வருகின்றனர். போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு குற்றவாளியை அடையாளம் காணும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டது. இச்சம்பவம், அவினாசி மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 23 Oct 2021 3:15 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!