/* */

அன்னூர் அருகே பஞ்சு குடோனில் தீ: ரூ.40 லட்சம் மதிப்பிலான பஞ்சு சேதம்

அன்னூர் கரியாம்பாளையம் அருகே பஞ்சு குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகின.

HIGHLIGHTS

அன்னூர் அருகே பஞ்சு குடோனில் தீ: ரூ.40 லட்சம் மதிப்பிலான பஞ்சு சேதம்
X

கோவை மாவட்டம் அன்னூரை அடுத்துள்ள கரியம்பாளையம் பகுதியில், மயிலேஸ்வரி என்பவருக்கு சொந்தமான பஞ்சு மில் குடோன் உள்ளது. பராமரிப்பு பணிகளுக்காக குடோன் கடந்த சில நாட்களாக இயக்கப்படவில்லை. தொழிலாளர்கள் யாரும் இல்லாத நிலையில், நேற்று மாலை குடோனில் வைக்கப்பட்டிருந்த பஞ்சில் திடீரென தீப்பற்றியுள்ளது.

சிறிது நேரத்தில் குடோன் முழுவதும் இருந்த பஞ்சுகளில் தீ பரவி மளமளவென ஏறிய தொடங்கியது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்தவர்கள் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு 5க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி, தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.இந்த விபத்தில் சுமார் 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீக்கிரையாகின. அன்னூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Updated On: 6 April 2022 9:30 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    குலதெய்வம் ஒரு குடும்ப உறுப்பினர் இயக்குநர் Perarasu உருக்கம்...
  2. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  3. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  4. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  5. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  6. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  8. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  9. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?