ஒமிக்ரான் அச்சம்: தடுப்பூசி செலுத்த மக்கள் ஆரவம்

ஒமிக்ரான் அச்சம்: தடுப்பூசி செலுத்த மக்கள் ஆரவம்
X

பைல் படம்.

அவினாசி பேரூராட்சி பகுதியில் நடந்த தடுப்பூசி முகாமில், 1,432 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.

அவினாசி பேரூராட்சி எல்லைக்குள், 14வது சுற்று தடுப்பூசி முகாம் நடந்தது. அவினாசி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, முத்துசெட்டிபாளையம், திருவள்ளுவர் நினைவு துவக்கப்பள்ளி, நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், கஸ்துாரிபாய் வீதி, ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, அவினாசி புதிய பஸ் ஸ்டாண்ட் ஆகிய இடங்களில் நடந்த முகாமில் 1,432 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். இதுகுறித்து பேரூாட்சி நிர்வாகத்தினர் கூறுகையில், ''கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதில், பொதுமக்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்திருக்கிறது. ஒமைக்ரான அச்சுறுத்தலும் இதற்கு முக்கிய காரணம்' என்றனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!