/* */

முக கவசம் போடலைன்னா துாக்கிடுவேன்! எச்சரிக்கிறார் 'எமதர்மன்'

முககவசம் அணிவதன் அவசியத்தை, ‘எமதர்மன்’ விளக்குவது போன்ற பேனர், மக்கள் மத்தியில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி வருகிறது.

HIGHLIGHTS

முக கவசம் போடலைன்னா துாக்கிடுவேன்!  எச்சரிக்கிறார் எமதர்மன்
X

முகக்கவசம் குறித்த விழிப்புணர்வு பேனர்.

கொரோனா தொற்றில் இருந்து தப்பிக்க, முககவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விழிப்புணர்வு அதிகளவில் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதில், பூலோகம் சென்று வரும் எமதர்ம ராஜன், சித்ரகுப்தரிடம், 'அங்கு எல்லோரும் ஒரு வகை கவசம் அணிந்து இருப்பதால் அடையாளம் காண முடியாமல் போய்விட்டது. ஆதலால், முகத்தில் கவசம் அணியாதோர் சிலரை தான் இங்கு என்னால் கொண்டு வர முடிந்தது' என்பது போன்ற வாசகம் தாங்கிய 'பேனர்' அச்சிடப்பட்டு, பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ளது. சில ஆட்டோக்களிலும் அந்த வாசகம் அச்சிடப்பட்ட பேனர் வைக்கப்பட்டுள்ளது. இது, பொதுமக்கள் மத்தியில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி வருகிறது.

அதே நேரம், இது விமர்சனத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் சிலர் கூறுகையில்,''முக கவசம் அணிந்தால் தான் கொரோனா தொற்றில் இருந்து தப்பிக்க முடியும் எனக்கூறுகிறார்கள்; ஏற்றுக் கொள்கிறோம். ஆனால், தினமும் மணிக்கணக்கில் முக கவசம் அணிந்து நாம் விடும் சுவாசக்காற்றை மீண்டும் நாமே உள்வாங்கிக் கொள்கிறோமே. இதனால், உடலுக்கு உபாதை எதுவும் வருமா என, மருத்துவர்கள் விளக்கம் அளிக்க வேண்டும்,'' என்றனர்.

Updated On: 15 Jan 2022 7:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பணம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. வீடியோ
    வேதிப்பொருட்களை வைத்து செயற்கை முறையில் பழுக்க வைத்த மாம்பழங்கள் 2.5...
  3. வீடியோ
    Dhoni-யை Underestimate பண்ணக்கூடாது ! #msdhoni #dhoni #msd #dhonifans...
  4. பட்டுக்கோட்டை
    கோடையில் பயறுவகை சாகுபடி..! செலவு குறைவு; லாபம் அதிகம்..!
  5. சிங்காநல்லூர்
    பாமக நிர்வாகிக்கு மிரட்டல் விடுத்ததாக மைவி3 நிறுவன உரிமையாளர் மீது...
  6. திருவள்ளூர்
    வெங்கல் அருகே நாய்கள் கடித்து புள்ளிமான் உயிரிழப்பு
  7. வீடியோ
    சோலி முடிஞ்சு Bro ! 32000 ரூவா மொத்தமும் Waste-அ போச்சு ! #ipl...
  8. திருவண்ணாமலை
    கோடை விடுமுறையை கொண்டாட திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வாங்க..!
  9. ஆவடி
    போதையில் இளைஞர்கள் தகராறு : தட்டிக் கேட்டவர்களுக்கு அரிவாள் வெட்டு..!...
  10. கவுண்டம்பாளையம்
    கல்லூரி மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை